தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

கீத்தா பரமானந்தன்

அலைபாயுதே!

ஆசைக் கடலில்
அனுதினப் பயணம்
அடங்க மறுக்கும்
ஆணவ அலைகள்
ஓசையற்றுச் சிரிக்குது
ஓயாத விதியும்
ஓடுது வாழ்வு
ஓடமாய் நாளும்!

கடைவிரித்துக் காத்திருக்கும்
கற்பனைக் கோலங்கள்
மடையாகக் கனவுகள்
மனந்தன்னைக் களிப்பாக்க
மாறுகின்ற நொடிகளுமோ
மறுதலித்து விளையாடும்
உடையாது காத்திடவே
உள்ளமனத்தின் போராட்டம்!

இருக்கின்ற இன்பத்தை
இணைத்துச் சுக்கித்திடாது
தருக்கத்தில் இழுபறியாய்
தடம்புரட்டும் ஏக்கங்கள்
வருகின்ற பொழுதெல்லாம்
வாஞ்சையை நிறைத்தாலும்
ஒருபோதும் அடங்காது
உள்ளமும் அலைபாயுதே!

கீத்தா பரமானந்தன்
27-02-2021

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இசை இசையோடு எல்லாம் இவ்வுலகுஇணைத்திடும் பசைபோல ஒட்டியே பாரினில் சிறந்திடும் அகிலத்தில் எல்லாமே இசையோடு சேர்ந்திடும் அன்றாட ...

    Continue reading