21
May
21
May
முயற்சியே பலம் முனைப்பே திடம்
ஜெயம் கவிதை 801
முடியாது என எண்ணினால் முயற்சியின் கதவுகள் அத்தனையும் மூடிவிடும்
நதியென...
21
May
முயற்சியே பலம் முனைப்பே திடம்
ஜெயம்
முனைப்புடன் கால்களை நகர்த்திடின் அவை தடைகளை தாண்டும்
தளராத மனத்துடன் தொடர்ந்தால்தான்...
கீத்தா பரமானந்தன்
அலைபாயுதே!
ஆசைக் கடலில்
அனுதினப் பயணம்
அடங்க மறுக்கும்
ஆணவ அலைகள்
ஓசையற்றுச் சிரிக்குது
ஓயாத விதியும்
ஓடுது வாழ்வு
ஓடமாய் நாளும்!
கடைவிரித்துக் காத்திருக்கும்
கற்பனைக் கோலங்கள்
மடையாகக் கனவுகள்
மனந்தன்னைக் களிப்பாக்க
மாறுகின்ற நொடிகளுமோ
மறுதலித்து விளையாடும்
உடையாது காத்திடவே
உள்ளமனத்தின் போராட்டம்!
இருக்கின்ற இன்பத்தை
இணைத்துச் சுக்கித்திடாது
தருக்கத்தில் இழுபறியாய்
தடம்புரட்டும் ஏக்கங்கள்
வருகின்ற பொழுதெல்லாம்
வாஞ்சையை நிறைத்தாலும்
ஒருபோதும் அடங்காது
உள்ளமும் அலைபாயுதே!
கீத்தா பரமானந்தன்
27-02-2021
Author: Nada Mohan
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...