10
Jul
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
10
Jul
நாடொப்பன செய்
நாடொப்பன செய்
செய்வன திருந்திடச் செய்யும் போதினிலே
நல்லென நாட்டிற்கு அமைந்த வேளையிலே
சில்லென...
10
Jul
மரணித்தவனே மறுபடி வந்தால்
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-07-2025
மரணத்தின் மௌனம் கலைந்து
மீண்டும் உயிர்த்தெழுவாயா?
மண்ணில் இட்ட விதை
மறுபடி...
கீத்தா பரமானந்தன்
அலைபாயுதே!
ஆசைக் கடலில்
அனுதினப் பயணம்
அடங்க மறுக்கும்
ஆணவ அலைகள்
ஓசையற்றுச் சிரிக்குது
ஓயாத விதியும்
ஓடுது வாழ்வு
ஓடமாய் நாளும்!
கடைவிரித்துக் காத்திருக்கும்
கற்பனைக் கோலங்கள்
மடையாகக் கனவுகள்
மனந்தன்னைக் களிப்பாக்க
மாறுகின்ற நொடிகளுமோ
மறுதலித்து விளையாடும்
உடையாது காத்திடவே
உள்ளமனத்தின் போராட்டம்!
இருக்கின்ற இன்பத்தை
இணைத்துச் சுக்கித்திடாது
தருக்கத்தில் இழுபறியாய்
தடம்புரட்டும் ஏக்கங்கள்
வருகின்ற பொழுதெல்லாம்
வாஞ்சையை நிறைத்தாலும்
ஒருபோதும் அடங்காது
உள்ளமும் அலைபாயுதே!
கீத்தா பரமானந்தன்
27-02-2021

Author: Nada Mohan
14
Jul
செல்வி நித்தியானந்தன்
இசை
இசையோடு எல்லாம்
இவ்வுலகுஇணைத்திடும்
பசைபோல ஒட்டியே
பாரினில் சிறந்திடும்
அகிலத்தில் எல்லாமே
இசையோடு சேர்ந்திடும்
அன்றாட ...
13
Jul
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம் _195
"கோடைகாலம்"
கோடையில் வரும்
வாடைகாற்று வசந்தத்தை வரவேற்கிது
வசலில் நிற்கும் வாழையடி...
10
Jul
ஜெயம்
இசைக்கு மயங்காதோர் இவ்வுலகில் இல்லை
இசையொன்றே தாண்டிவிடும் ஜாதிமத எல்லை
இறைவனுக்கு...