ஆளுகின்றான் அடிபணிகின்றோம்..!!

வியாழன்கவி 2300!! ஆளுகின்றான் அடிபணிகிறோம்!! வாழுகின்ற வாழ்க்கையிலே வழி நெடுக பயணிப்பான் ஆளுகின்ற அழுத்தக்காரன் வீழ்ந்திடுவான் உழைப்பாலே சோம்பலென்று கிடந்தாலோ தூரம்...

Continue reading

வரமாகும் வாய்ப்புக்களே

இரா.விஜயகௌரி வரமாகும் வாய்ப்புக்கள் அவை தடமாகும் செயல் தழுவின் உரமாய் நாம் பயன்கொள்ளின் உரைத்தெழுதும் நம் தடங்கள் வாய்த்ததெல்லாம்...

Continue reading

கீத்தா பரமானந்தன்

பொங்கட்டும் பொங்கல்!

மங்கலம் பொங்க
மனங்கள் சிரிக்க
எங்கணும் செழுமை
எழிலுடன் தங்க
பங்கயம் என்றே
பாரதும் மிளிரப்
பரவசம் நிறத்தே
பொங்கட்டும் பொங்கல்!

கங்குலும் விலகக்
கதிரதன் அணைப்பில்
தங்கியே விழைச்சல்
தரணியை நிறைக்க
கண்மாய் குளங்கள்
கரையின்றிப் பாய
இல்லத்தில் உள்ளத்தில்
இனிமையைப் பொங்கட்டும்!

அன்பினிற் பிணைந்து
அகிலமும் ஒன்றாய்
சிந்தனை விரித்துச்
சிகரங்கள் தொட்டிட
வெற்றிக் களிப்புடன்
வேட்டுகள் முழங்க
எங்கணும் பொங்கட்டும்
பொங்கலோ பொங்கல்!

கீத்தா பரமானந்தன்15-01-24

Nada Mohan
Author: Nada Mohan