தவிக்கும் நிலை மாறிடுமோ ,ராணி சம்பந்தர்

புத்தம் புதுப் பொலிவோடு நித்தம் நாடும் சோலியோடு பிறந்த ஆங்கிலப்புத்தாண்டே நீ வருக நல்லொளி தருகவே குறுகிய பாதையில்...

Continue reading

கீத்தா பரமானந்தன்

குருதிப்புனல்!
சந்ததி சந்ததியாய் வாழ்ந்த பூமியில்
வந்தவனும் போனவனும் போட்ட வெறியாட்டம்
குந்திஇருக்க இடமின்றிக் கொத்துக் குண்டிடை
நொந்து தவித்து நிர்க்கதியாய் நின்றநிலை

பிஞ்சுகள் பூக்கள் பேதையாம் மூத்தோர்
வஞ்சகரின் இனவெறியில் வதைபட்ட கோரம்
மந்தபுத்திக் காரனால் கருவறையும் கல்லறைம்
கந்தகக் காற்றிடை ஒன்றான சாபம்!

சொந்தங்கள் இழந்து அங்கங்கள் சிதறி
அபலைகளாய்த் தமிழர் அல்லலுற்ற கோலம்
சமாதனமன்றுகளும் சாமியும் சத்தமற்றுப் பார்த்திருக்க
அந்தமானோர் ஆயிரமாய் மறக்குமா மறக்கலாமா?

நந்திக்கடலும் குருதிப்புனலாக நாநனைக்க நீரின்றி
அந்தரிச்ச பொழுதும் பந்தங்களைத் தேடலும்
வந்தலைத்து நிற்கிறதே வாழ்வெல்லாம் எங்களுடன்
இந்தநிலை மாறிடுமா இதயங்கள் கேவலுடன்!

கீத்தா பரமானந்தன்
13-05-24

Nada Mohan
Author: Nada Mohan

    சக்தி சிறினிசங்கர் சிறுமைகளை அகற்றிடவே பொங்கு சினத்தினையே களைந்திடவே பொங்கு கறுத்தஉள்ளம் கண்டாலே பொங்கு காசுக்காய் அநீதிசெய்வோர் கண்டால் உறுத்துமட்டும்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பொங்குவாய்... நிறைமதியாண்டாய் நித்தம் மகிழ்வாய் வரவுகள் சீராய் வளர்மதி வையமாய் வற்றாத கல்வியாய் உலகியல் ஐக்கியம் உயர்வின் பதிவாய் பொங்குவாய் புத்தாண்டே புலத்திலும்...

    Continue reading