சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

குரு பெயர்ச்சி

அனைவருக்கும் வணக்கம்🙏
வியாழன் கவிதை
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-23

18-04-2024

குரு பெயர்ச்சி

குரோதி பிறந்திட குருபெயர்ச்சியாம்
விரோதி அகன்றிங்கு மனமகிழ்ச்சியாம்
குன்றக் குமரனைக் கும்பிட
குலமெலாம் தழைத்தோங்குமாம்!

கோயில் வாசலில் பல காலமாய்
பலனேதும் அற்று புலம்பும் நீ
நலனேதும் கிடைக்க புரட்டிப் பார்
சந்நிதியைக் கொஞ்சம் மாற்றிப் பார்!

கேட்பதையே கேட்க கேட்பவன் செவிப்பறையும் இசைவாக்கம் காண
நோக்கம் நிறைவேற நுண்ணறிவு கொள்
தேக்கம் அற்று நீ வாழ!

தொழுதலுடன் விழிதலும் செய்
தொழிலையும் தேடி ஆகாரம் கொள்
கூடிக் கதை பேசி குலவி வா
குன்றக் குமரனே கூப்பிட்டுத் தருவார்!

இறையருளால் குருவும் பெயர
ஆயுளும் கெட்டி நோய்களும் அற்று
புத்திர சம்பத்து, வாகனம், மனையென
குருபெயர்ச்சியும் குதுகலமுமே!

நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.

Nada Mohan
Author: Nada Mohan