” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

குரு பெயர்ச்சி

அனைவருக்கும் வணக்கம்🙏
வியாழன் கவிதை
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-23

18-04-2024

குரு பெயர்ச்சி

குரோதி பிறந்திட குருபெயர்ச்சியாம்
விரோதி அகன்றிங்கு மனமகிழ்ச்சியாம்
குன்றக் குமரனைக் கும்பிட
குலமெலாம் தழைத்தோங்குமாம்!

கோயில் வாசலில் பல காலமாய்
பலனேதும் அற்று புலம்பும் நீ
நலனேதும் கிடைக்க புரட்டிப் பார்
சந்நிதியைக் கொஞ்சம் மாற்றிப் பார்!

கேட்பதையே கேட்க கேட்பவன் செவிப்பறையும் இசைவாக்கம் காண
நோக்கம் நிறைவேற நுண்ணறிவு கொள்
தேக்கம் அற்று நீ வாழ!

தொழுதலுடன் விழிதலும் செய்
தொழிலையும் தேடி ஆகாரம் கொள்
கூடிக் கதை பேசி குலவி வா
குன்றக் குமரனே கூப்பிட்டுத் தருவார்!

இறையருளால் குருவும் பெயர
ஆயுளும் கெட்டி நோய்களும் அற்று
புத்திர சம்பத்து, வாகனம், மனையென
குருபெயர்ச்சியும் குதுகலமுமே!

நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.

Nada Mohan
Author: Nada Mohan