30
Jul
30
Jul
நட்பென்றாலே……..
ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026
எங்கிருந்தோ வந்த சொந்தம்
எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம்
இரத்தபந்தம் இல்லாஉறவு
இருளில்...
30
Jul
“நட்பென்றாலே”
நேவிஸ் பிலிப் கவி இல(640)
அன்பிற்கு அடைக்கும் தாழும் இல்ல
அன்பை பிளக்கும் வாளும்...
குரு பெயர்ச்சி
அனைவருக்கும் வணக்கம்🙏
வியாழன் கவிதை
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-23
18-04-2024
குரு பெயர்ச்சி
குரோதி பிறந்திட குருபெயர்ச்சியாம்
விரோதி அகன்றிங்கு மனமகிழ்ச்சியாம்
குன்றக் குமரனைக் கும்பிட
குலமெலாம் தழைத்தோங்குமாம்!
கோயில் வாசலில் பல காலமாய்
பலனேதும் அற்று புலம்பும் நீ
நலனேதும் கிடைக்க புரட்டிப் பார்
சந்நிதியைக் கொஞ்சம் மாற்றிப் பார்!
கேட்பதையே கேட்க கேட்பவன் செவிப்பறையும் இசைவாக்கம் காண
நோக்கம் நிறைவேற நுண்ணறிவு கொள்
தேக்கம் அற்று நீ வாழ!
தொழுதலுடன் விழிதலும் செய்
தொழிலையும் தேடி ஆகாரம் கொள்
கூடிக் கதை பேசி குலவி வா
குன்றக் குமரனே கூப்பிட்டுத் தருவார்!
இறையருளால் குருவும் பெயர
ஆயுளும் கெட்டி நோய்களும் அற்று
புத்திர சம்பத்து, வாகனம், மனையென
குருபெயர்ச்சியும் குதுகலமுமே!
நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.
Author: Nada Mohan
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...
20
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
21-07-2026.
அமைதி கலைந்த தனிமையில்
அழகிய அந்திப் பொழுதினில்
இதயம் வருடும்...