“பள்ளிப்பருவத்திலே”..!!

சிவதர்சனி இராகவன் வியாழன் கவிதை நேரத்துக்காக கவி -2152 “பள்ளிப்பருவத்திலே”!! கள்ளமில்லாத உள்ளம் கொண்டோம் களங்கமில்லாத செயலுங்கண்டோம் வெள்ளிச்சிரிப்பொலிபூண்டுநின்றோம் அள்ளி நட்பை...

Continue reading

மறக்கமுடியுமா மே 18

ராணி சம்பந்தர் முள்ளிவாய்க்கால் முனகலிலே இன்னும் எம் காதினில் ஒலிக்க மூச்சுப் பேச்சின்றி உயிருடனே மூடிய கிடங்கிலே அடங்கியதே துள்ளிக்...

Continue reading

கெங்கா ஸ்ரான்லி

சந்தம் சிந்தும் சந்திப்பு
சலவை
————
சலவை செய்த உடுப்பே
தூய்மையைக் காட்டும்
கந்தையானாலும் சலவை செய்து
சுத்தமாக உடுக்க வேண்டும்
உள்ளத்தை சலவை செய்தால்
உள்ளே இறைவன் இருப்பான்
வெள்ளம் கூடப் பாய்கையில்
வழியில் கிடப்பதை சலவை செய்தே பாயும்
வெள்ளை வெளேர் என்று
சலவை செய்த உடுப்பு
ஆசானுக்கு
அதிலே தோன்றுமே மகிழ்ச்சி
சலவைகள் நன்றாகச் செய்யப்படுகின்றன
சலவைத் தொழிலாழியால் அல்ல
சலவை செய்யும் மெஷினால்
மூளையும் சலவை செய்யப்படுகிறது
சில மனிதர்களால்
அதிலே புத்திசாலிகளும் தோற்பதுண்டு
சலவை பல வித்த்திலுண்டு
பார்த்துச் செய்யப்பட வேண்டிய தென்று!
நன்றியுடன்
கெங்கா ஸ்ரான்லி

Nada Mohan
Author: Nada Mohan