” தண்ணீருக்காய் திரளும் போர்மேகங்கள் “

ரஜனி அன்ரன் (B.A)26.03.2026...தண்ணீருக்காய் திரளும்..... போர்க்கால மேகங்கள் புடைசூழ கார்கால மேகமாய் கரும்புகையாய் வானம் தண்ணீருக்காய்...

Continue reading

தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்

நகுலா சிவநாதன் தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள் கார் கால மழைமேகம் கண்ணிமைக்கும் நேரத்திலும் போர் மேகம் சூழ்ந்தாலும் வாரியிறைக்கும்...

Continue reading

கெங்கா ஸ்ரான்லி

சந்தம் சிந்தும் சந்திப்பு
உயர்க்கொடை
————-
விலைமதிப்பில்லாத இந்த உயிர்
விடியலுக்காக ஈந்த உயிர்
ஈகைச்சுடராக எரிகிறதே
ஈன்றவர் நெஞ்சம் கொதிக்கிறதே
நாட்டு நலனுக்காக நல்லுயிர் கொடுத்து
காடுமேடு பள்ளம் தாண்டி
காவலர்களாய் காத்தாரே எம்மக்களை
வேட்டு வைத்து உயிரை
ராணுவம் பறித்ததே
எத்தனை உயிர்கள் எத்தனை இடர்கள்
பட்டினி இருந்து பரிதவித்த போதும்
ஏட்டினில் எழுதிய எண்ணற்ற நினைவுகள்
பாட்டினில் பாடி இன்று என்ன பயன்
உயிர்கொடை கொடுத்த
வள்ளல் எங்கே
உயிர்காக்க தம்முயிர் ஈந்த மாவீர்ர்
எங்கே
முத்தான உயிரை சொத்தாக எம்
தாய்மண்ணுக்காய் ஈந்த
கொடைவள்ளல்களே
காந்தள் பூக்களால்
அர்ச்சனை செய்து
அஞ்சலி செய்கிறோம்
உமது ஈகைக்காய்
மாவீர மணிகளே!
கெங்கா ஸ்ரான்லி

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் அன்பில் உயர்ந்த பிறப்பிடம் ஆதரவில் பதிந்த சிறப்பிடம் இனிமை உதித்த தரிப்பிடம் ஈரேழு ஜென்மும் போற்றும் உலகத்தோரின்...

    Continue reading