மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு……

இரா விஜயகௌரி இனிதாம் வாழ்வியல் பயணத்தொடரில் இடரெனச் சூழ்ந்திடும் நோயின் தொடுப்பு காற்றினில் மூச்சாய் கலந்திடும் கிருமி உள்துளைபுகுந்து...

Continue reading

கெங்கா ஸ்ரான்லி

மனித அவலங்கள்

மனிதம் தேடும் நாளில்
மனிதக் கொலையே நடக்கிறது.
மானிடம் நொந்து வேகுகின்றது
மனிதனே என்ன செய்கின்றாய்.

புகழுக்காக உயிர்களை
புளுவாக நசுக்கலாமோ.
உயிர்களின் மேன்மை
இவ்வளவு தானோ உணர்வாய்.

அனலிடைப்பட்ட மக்கள் மனம்
கூட்டம் கூட்டமாக வெளியேற்றம்.
எங்கு போவது என்ன செய்வது
சங்கடம் நிறை வாழ்வின் எல்லை.

பாலகர் பாலுக் கழ
முதியோர் மூட்டை மூடிச்சுடன்
கதி கலங்கி நிற்கும் நிலை
கண்டவர் கவலையில் ஆழ்ந்தனர்.

அன்று நாம் பட்ட அவலம்
இன்று உக்ரைன் அனுபவிக்கிறது
மனித அவலங்கள் மறைவது எப்போது
மக்கள் நிம்மதி வாழ்வு வாழுவது எப்போது.

கெங்கா ஸ்ரான்லி.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading