பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

கெங்கா ஸ்ரான்லி

வைகாசியில்

வைகாசியும் பிறந்தது
வஞ்சியரும் மகிழ்ந்தனர்.
துஞ்சியவர் துயிலெழும்பி
மஞ்சளும் பூசிக் குளித்தனர்.

மஞ்சள் வெயிலிலே
மலர்ந்தன மலர்கள்.
வண்டுகள் ரீங்காரம்
சுண்டியே இழுத்தது.

மயங்கிய மலர்களும்
வாவென வரவேற்க.
வண்டினம் புணர்ந்தது
மகரந்த மயக்கத்தில்.

தேனுண்ட இனிமை மயக்கம்
தேரா மண்ணில் முடக்கம்.
அந்தோ தேயந்துவிட்டதே
வண்டின் இணக்கம்.

ரீங்காரமிட்ட வண்டு
லீலைகள் புரியும் எண்டு.
நினைத்த மலர்ச் செண்டு
நனைந்தன மழையில் நின்று.

பெருமழை பெரும்புயல்
முறிந்தன மலர்கொப்பு.
நிலத்திலே வாடி விழ
வெள்ளம் இழுத்து
சென்றது மலரையும்
வண்டையும்.
வைகாசியில் இதுவும்
ஒரு வன்மையா என நினைத்தபடி.

கெங்கா ஸ்டான்லி

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading