புத்தாண்டே வா -56

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 10-04-2025 புத்தாண்டே வா புதுமை பொலிவுடனே புலத்தில் நிம்மதியும் பூகோளத்தில் அமைதியும் சோகங்கள் விட்டு சொந்தங்கள் சேர்ந்து சொல்பேச்சு கேட்டு சொர்க்க...

Continue reading

இன்னமும் மாறவில்லை

நகுலா சிவநாதன் இன்னமும் மாறவில்லை காலநிலை இன்னமும் மாறவில்லை கடும் குளிரும் குறையவில்லை பாட்டு வெயிலும் பகலவன் ஒளியும் கூட்டுது...

Continue reading

கெங்கா ஸ்ரான்லி

சந்தம் சிந்தும் சந்திப்பு
பிள்ளைக் கனி அமுது
—————
பெண் முழுமையடைவது
இல்லற வாழ்வில்
பிள்ளை யொன்று பெற்றாலே
அன்றேல் முழுமை அடைவதில்லை
ஆன்றோர் சொன்னது
இப்பேறு எல்லோருக்கும்
வாய்ப்பது இல்லை
வாய்த்தவர்கள் அதிஷ்டசாலிகள்
பிள்ளைகள் இல்லாதவர் படும்பாடோ
மனக்கவலை ஊரார் பேச்சு
அப்பப்பா எத்தனை வன்மை
இதையும் தாங்கி அவர்
விரதம் இருந்து ஊர்க்கோவிலெல்லாம் சென்று
வழிபட்டு
ஒரு பிள்ளையைப் பெற்றால்
போதுமா
பேணி வளர்க்க வேண்டுமே
இல்லற வாழ்வின் இனிமையே
அந்த பிள்ளைக் கனி அமுது அல்லவா
பிஞ்சு மழலையின் கொஞ்சு மொழியில்
தம் கவலை கஷ்டம் மறந்து
களிப்புறும் தருணமல்லவா
மழலையின் சொற்கேளாதவரே
குழனிது யாழினிது என்பராம்
பிள்ளைக் கனி அமுது
அது உயிரில் கலந்த ஒன்று
அதன் கோபம் சி்ரிப்பு அழுகை
அரைக் கணம் மட்டுமே
பின் எல்லாம் மறந்து
ஓடி வந்து கட்டி முத்தம் தந்தால்
வந்த கோபம் தானாய் பறந்து விடும்
சின்ன சின்ன வேலைகள்
சிரிப்பேட்டும் தன்மைகள்
பிள்ளைக் கனி அமுதின்
பேறல்லவா
நாமும் பெற்றோம் அதை
மற்றவரும் பெற வேண்டும்
பிள்ளைக் கனி அமுதை
மகிழ்வுடன் எல்லோரும் வாழலாமே!
நன்றியுடன்
கெங்கா ஸ்ரான்லி
11.2.24

Nada Mohan
Author: Nada Mohan

    வஜிதா முஹம்மட் சந்திர நாட்காட்டி சரித்திர வழிகாட்டி புனிதப்பட்ட மாதம் புரையோடிய பாவத்தின் மன்னிப்பு நோன்பின்நேரம் இறைகட்டளையை நினைவூட்டி மனித...

    Continue reading