கோசலா ஞானம்

சந்தம் சிந்தும் சந்திப்பு

பக்குவம் தந்த ஆசான்

குன்றிலிருக்கும் குலதெய்வம் ஆசான்
என்றும் எமக்குமே ஏணியாய் – நின்றுமே
ஊக்கம் தருகின்ற உன்னத பண்பாளர்
நோக்கம் கருதாத நிறைவு

நிறைகுட மாகவே நேர்த்தியாய்க் கற்கக்
கறையில்லா( து) ஊட்டுகின்ற கல்வி- துறைசார்பாய்
ஏற்றம் வரவே எழுத்தறி வித்தகுரு
போற்றிட நாமும் பணிவு

பணிவுமே வாத்தியாரின் பக்குவம் தந்ததே
துணிவாய் மரபில் துலங்கி – மணிமணியாய்
சற்றும் தயங்காச் சரஸ்வதி தேவியும்
பற்றாய் பயிற்றினார் பார்த்து.

கோசலா ஞானம்.

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading