பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

க.குமரன்

சந்தம் சிந்தும்
வாரம் 242

நீரழிவு
காதல் என்னும் இனிய தேவதையை
உன் உதிரத்தில்
கண்டேன் என்றாள் வைத்தியர்

கனப் பொழுதும்
நீ அசந்தால்
காவியமாவாள்
உன்னிடம் என்றார்!

தித்திப்பை நாவில் எடு
திகட்டும் கசப்பை அவளுக்கு
கொடு என்றார்!…

அச்சம் சில நாள் என்றாலும்
அவள் என்னை வசப்படுத்தினாள்
நித்தம் என்னில் வளர்ந்து
நிதம் என்னை குழைக்கின்றாள்
சின்னா பின்னப்படுத்தி!.!

உன்னில் நான் பாதி
உன் இதயத்தை ஸ்தம்பிக்க
வைக்கவா?
என்கின்றாள் சாகசக்காரி!

வயிற்றில் குத்தி குத்தி
தடுக்க பார்க்கின்றேன்
அவள் காதலை!

கும்பிடு போடுகின்றேன்
என்னை விட்டு விடு என்று!
கோபம் கொள்கின்றாள்
என் சலரோக தேவதை!

அவள் காதல் என் தேகத்தில்
ஏகமும் அவள் வசமாக!…..
😔
க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading