” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

க.குமரன்

சந்தம் சிந்தும்
வாரம் 242

நீரழிவு
காதல் என்னும் இனிய தேவதையை
உன் உதிரத்தில்
கண்டேன் என்றாள் வைத்தியர்

கனப் பொழுதும்
நீ அசந்தால்
காவியமாவாள்
உன்னிடம் என்றார்!

தித்திப்பை நாவில் எடு
திகட்டும் கசப்பை அவளுக்கு
கொடு என்றார்!…

அச்சம் சில நாள் என்றாலும்
அவள் என்னை வசப்படுத்தினாள்
நித்தம் என்னில் வளர்ந்து
நிதம் என்னை குழைக்கின்றாள்
சின்னா பின்னப்படுத்தி!.!

உன்னில் நான் பாதி
உன் இதயத்தை ஸ்தம்பிக்க
வைக்கவா?
என்கின்றாள் சாகசக்காரி!

வயிற்றில் குத்தி குத்தி
தடுக்க பார்க்கின்றேன்
அவள் காதலை!

கும்பிடு போடுகின்றேன்
என்னை விட்டு விடு என்று!
கோபம் கொள்கின்றாள்
என் சலரோக தேவதை!

அவள் காதல் என் தேகத்தில்
ஏகமும் அவள் வசமாக!…..
😔
க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan