க.குமரன்

சந்தம் சிந்தும்
வாரம் 255

பகலவன்
இருளில் தேடுகின்றாயா
பகலை
பகலில் தேடுகின்றாயா
நிலவை
குளிரில் தேடுகின்றாயா
சுட்டை
சுட்டில் தேடுகின்றாயா
குளிரை
இருப்பதை விட்டு
இல்லாத்தை தேடுகின்றாயே
மனமே!
இல்லாத து கிடைத்துவிட்டால்
இழந்ததை தேடுகின்றாயே

ஒடும் வாழ்வில்
உந்தன் குறிக்கோள்
எதில்
வாழும் வாழ்வில்
வழிகளை தேடுவது
எதில்
காலைப் பகலவன்
போல்
களைந்து எழுவாய்
உன் கலக்கத்தில் இருந்து!

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading