பதியமிடும் எழுத்தாணிகள்…

வசந்தா ஜெகதீசன் இருபத்தியொன்பது ஆண்டின் தொடர்ச்சி ஈடிணையற்ற படைப்புகளின் வளர்ச்சி இளையோர்கள் நோக்கிய புரட்சி எழுத்தாளர் மாதமாய்...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்

நகுலா சிவநாதன் பதியமிடும் எழுத்தாணிகள் எழுத்தாலே பதியமிட்டு எண்ணத்தால் கோலமிட்டு எழுகின்ற வாழ்க்கை எழில்மயமாய் அமைந்திடும் எழுத்தாளர்வாரம் எடுக்கின்ற பதியம் தொடுக்கின்ற மாலைகளால் தொடரட்டும் என்றும் விரிந்திட்ட...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்…..

ரஜனி அன்ரன் ((B.A) பதியமிடும் எழுத்தாணிகள் 04.06.2026 ஒற்றைவரியில் உலகத்தைத் திருப்பும் ஏற்றம்மிக்க ஆயுதம் எழுத்தாணி எழுத்தின்...

Continue reading

சக்தி சக்திதாசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு287
விருப்ப தலைப்பு
“தோழா உனக்கு..,”
எழுந்து விட்டேன் தோழா !
விடிந்து விட்டதே பார்
முடிந்து விட்டதே தோழா
முடியாத துயரெல்லாம் நெஞ்சில்

காலங்கள் ஓடுவது அவசரமாய்
காரியங்கள் பலவுண்டு தோழா
கரைந்து போன நினைவுச்சுழல்கள்
கலங்கிப் போன கனவுக் குவியல்

உள்ளத்தை உரமாக்கி நீயும்
உணர்வுகளைத் தீட்டிக்கொள்
உலத்தின் வரைபடத்தில் தோழனே
உனக்கும் ஒரு இடமுண்டு

நேற்றைகளைத் தொலைத்தவர் பலர்
இன்றைகளைத் தவற விட்டு
நாளைகளுக்காய் ஏங்குகிறார்
நீயேற்றும் விளக்கின் ஒளி பரவட்டும்

கண்ணீர் எம் கன்னங்களில்
வரைந்த கோடுகளின் வலிமை
காலத்தை மாற்றி எழுதும்
வல்லமையை கைகளுக்கு கொடுக்கும்

உற்சாகத்தோடு புறப்படு தோழா !
உள்ளத்தில் ஆனந்த வெள்ளம் பாயட்டும்
இனியெமது காலமென்னும் கீதத்தை
இதயத்துள் உரக்கவே இசைத்திடு

சக்தி சக்திதாசன்

Nada Mohan
Author: Nada Mohan