கனவுப் பயணம்

சக்தி சிறினிசங்கர் விழி மூடித் தூங்குகையில்பயணிக்கின்றேன் தொலைதூரம் வழிநெடுக வயல்வெளிகள் வயல்வெளி யாவும் பச்சைப் பசேலென விரிந்து கண்களைக்...

Continue reading

கனவுப்பயணம்……

ரஜனி அன்ரன் (B.A) ....கனவுப்பயணம்..... 07.05.2026 கற்பனைச் சிறகைவிரித்து கனவுகளில் மிதந்து எழுத்துக்களின் தோப்பில் தொலைந்து எண்ணங்களின்...

Continue reading

சக்தி சக்திதாசன்

மூடிவிட்ட புத்தகத்துள்
முடங்கிவிட்ட
அத்தியாயமாய் ;

அடங்கிவிட்ட வாழ்வின்
ஆரவாரங்கள்
அமைதியாகின ;

இங்கிலாந்தின் மகாராணி
இரண்டாம் எலிசபெத்தின்
மீளாத உறக்கமிது ;

எறும்புகளின் ஊர்வலம்போல்
ஊர்ந்து செல்லும்
மக்கள் அணிகள் ;

இரவுபகல் மாற்றமின்றி
முடியாண்ட ராணியை
தரிசிக்கும் ஆவலில் ;

இருபத்தோடு ஓராறு
இளமையின் உச்சத்தில்
முடிசூடிக் கொண்டவர் ;

தொண்ணூரோடு ஓராறு
அகவையில் விழிகளை
ஆழமாய் மூடிக்கொண்டார் ;

அரியணையில் அமர்ந்து
அரசாண்டவர் அல்ல
அரசி எலிசபெத் !

மக்கள் மனங்களில்
குடியிருந்து நாட்டின்
முதுகெலும்பாயிருந்தார் ;

ராணியாக மட்டுமல்ல
தாயாகப் பாசத்துடன்
தாரமாகக் காதலுடன் ;

ஒன்றல்ல , இரண்டல்ல
ஒன்றான மணவாழ்வில்
ஒரெழுபத்தி மூன்றாண்டுகள் ;

கடமை, கண்ணியம், கட்டுப்பாடு
கணப்பொழுதும் தவறாமல்
கண்மூடிய தலைவியிவர் ;

விமர்சனங்கள், முறைப்பாடுகள்
விலகியே வாழ்ந்திருந்து
விழிகளை மூடினார் ;

கணவனே தன்றன்
உரமிக்க அடித்தளமென்றே
உரக்கவே உரைத்திட்டார் ;

கண்ணிறைந்த கணவன்
காற்றாகி ஒரு வருடத்தில்
காற்றேகிக் கலந்திட்டார் ;

சோதனகள் அடுக்கடுக்காய்
சோதித்த போதிலுமே
சோராமல் திகழ்ந்திட்டார் ;

இறையுணர்வு கொண்டவர்
இதயத்தில் அனைத்து மதங்களையும்
இயல்பாக மதித்திட்டார் ;

பொதுநலவாய நாடுகளை
இணைத்திடும் பாலமாய்
இருந்தவர் மறைந்திட்டார் ;

உயர்ந்த மனிதரிவர்
பெருமையினை உணர்த்துமிங்கு
அனைத்துலக அஞ்சலியே !

சர்வதேசத் தலைவர்கள்
சேர்ந்திங்கு செலுத்துகிறார்
சரித்திரப் புகழாஞ்சலி ;

நாலுபத்தோடொரேழு அகவைகள்
நானுமிங்கு வாழ்வமைத்தேன்
நலமுடனே வாழுகின்றேன் ;

அன்னை எலிசபெத் மகாராணிக்கு
அன்பார்ந்த அஞ்சலிகள்
அஞ்சலித்து வணங்குகிறேன் ;

போய்வாருங்கள் மகாராணியாரே !
நாட்டினை ஆண்டவராக அல்ல
மக்கள் மனங்களை ஆண்டவராக ;

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading