கணப்பொழுதில்

கணப்பொழுதில்.. சிவருபன் சர்வேஸ்வரி கணப்பொழுதில் மாறும் மனிதன் கோடி இமைக்கும் நேரத்துக்குள் இரணியர் பலகோடி முடிக்கும் காரியம் தெரியாதவர்...

Continue reading

சக்தி சக்திதாசன்

மூடி விட்ட அதரங்களுக்குள்
புதைந்து போன புன்னகை
திறக்காத இமைகளுக்குள் 
சிறையாகிப் போன விழிகள்
கல்லாகிப் போன இதயத்துள்
கருகிப் போன காதல் நினைவுகள்

சொல்லாமல் போன கணங்களுக்குள்
கலைந்து போன ஓவியங்கள்
நில்லாமல் ஓடிய பொழுதுகளில்
நெஞ்சோடு உறங்கி விட்ட உணர்வுகள்
கொல்லாமல் கொன்றிடும் காதலது
பொல்லாத பொருள் சொல்லும்

சிதைந்து போன கோபுரம் போல்
கலைந்து போன முகில்களைப் போல்
கரைந்து போகும் நிலவது போல்
மறைந்து போகும் ஆதவன் போல் 
மலர்ந்து வந்த காதலை நீ ஏனோ
மரணித்து ரசித்துக் கொண்டாய்

எண்ணங்கள் எத்தனையோ 
ஏந்தி வந்த காளைப்பருவமதில்
காதலெனும் உணர்வின் ஆழத்தை
கருதாமல் கால் விட்டு அமிழ்ந்ததினால்
புதிதாகக் கற்றுக் கொண்ட நல்
வாழ்க்கை நீச்சல் பாடம் . . . 

அடடா !
அது கூட என் அன்னைத் தமிழில்
அழகாமோ ! 
என்ன அதிசயம் !

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் செல்லாக்காசு புவனத்தில் பலநாட்டின் நாணய மதிப்பு புழங்கிடும் பல்வேறு நாமத்தின் சிறப்பு பலநாட்டின் பணத்தால் பாரிய விரிசல் பதுக்கிய...

    Continue reading