10
Jul
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
10
Jul
நாடொப்பன செய்
நாடொப்பன செய்
செய்வன திருந்திடச் செய்யும் போதினிலே
நல்லென நாட்டிற்கு அமைந்த வேளையிலே
சில்லென...
10
Jul
மரணித்தவனே மறுபடி வந்தால்
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-07-2025
மரணத்தின் மௌனம் கலைந்து
மீண்டும் உயிர்த்தெழுவாயா?
மண்ணில் இட்ட விதை
மறுபடி...
சக்தி சக்திதாசன்
அம்மா என்றொரு தெய்வம்
அன்பின் அடிப்படைத் தத்துவம்
அகரமாய் வாழ்வின் ஆரம்பம்
ஆண்டவன் என்பதே தாயுள்ளம்
விளக்கின் ஒளியாய் ஒளிர்ந்திடும்
விந்தையை அறிந்தவள் அன்னையே
வியப்பின் வடிவாய் மலர்ந்தவள்
வித்தகப் பெண்ணாய் அன்னையரே !
கண்ணில் ஒருதுளி நீரென்றால்
கசியும் உதிரம் அவள்நெஞ்சில்
தனக்கென எதையும் எடுக்காமல்
தன்னை குழந்தைக்காய் ஈந்திடுவாள்
தாய்மை என்பது ஓர்வரமே !
தாயினம் உலகில் தனியினமே !
பெண்ணாய்ப் பிறந்த அனைவருமே
பூமியில் தாய்மனம் கொண்டவர்களே !
அன்னையர் தினத்தில் மட்டுமல்ல
அனைத்துத் தினமும் தாய்மையினை
போற்றிடும் வகையில் வாழ்ந்திடலாம்
பெண்களைக் கண்ணாய் மதிப்பதனால்
வாழிய ! வாழிய ! தோழியரே !
வாழிய ! வாழிய ! அன்னையரே !
புதியதோர் சமுதாயம் அமைத்திடவே
புதுமைகள் புரிந்தே வென்றிடுக
சக்தி சக்திதாசன்

Author: Nada Mohan
14
Jul
செல்வி நித்தியானந்தன்
இசை
இசையோடு எல்லாம்
இவ்வுலகுஇணைத்திடும்
பசைபோல ஒட்டியே
பாரினில் சிறந்திடும்
அகிலத்தில் எல்லாமே
இசையோடு சேர்ந்திடும்
அன்றாட ...
13
Jul
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம் _195
"கோடைகாலம்"
கோடையில் வரும்
வாடைகாற்று வசந்தத்தை வரவேற்கிது
வசலில் நிற்கும் வாழையடி...
10
Jul
ஜெயம்
இசைக்கு மயங்காதோர் இவ்வுலகில் இல்லை
இசையொன்றே தாண்டிவிடும் ஜாதிமத எல்லை
இறைவனுக்கு...