பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

சக்தி சத்திதாசன்

காதல்
நெஞ்சுக்குள்ளே எரியும்
சுவாலை எந்த நீரினாலும்
அடங்காத தாகம்
எனக்குள்ளே … எனக்குள்ளே ….
பிறக்கின்ற வேகம் ;
ஏதோ சிறகெடுத்து
பறக்கின்ற ஞானம்…..

பிறந்ததன் பயனறியா
இறந்தபின் முடிவறியா
ஈரம் !ஈரம் !ஈரம் !
நெஞ்சை அழுத்தி நிற்கும்
பாரம் !
மோகச் சுழலுக்குள்
மீள வழியின்று
சிக்கித் தவித்து நின்ற
முட்டாள் பருவமதில்
அறியாதிருந்த அனுபவங்கள்
ஆயிரமாய்க் கற்றுத் தந்தன…

எதைத் தேடினேன் —-பின்னே
அதையா நாடினேன்?
ஏனோ மூடினேன் நெஞ்சக்
கதவைத் திறக்கச்
சாவி ! சாவி !சாவி !

இல்லையெனத் தாவிச்
சரிந்ததொரு
தென்னஞ்சோலையெனும்
காதல் சாலையதில்
நீளமான பயணத்தில்
நின்று விட்ட ஞாபகங்கள் …….

தொலைத்து விட்ட கணங்களை
எனக்குள் நானே
இன்றும் தேடிக் கொண்டே …..

சக்தி சக்திதாசன்

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading