” தண்ணீருக்காய் திரளும் போர்மேகங்கள் “

ரஜனி அன்ரன் (B.A)26.03.2026...தண்ணீருக்காய் திரளும்..... போர்க்கால மேகங்கள் புடைசூழ கார்கால மேகமாய் கரும்புகையாய் வானம் தண்ணீருக்காய்...

Continue reading

தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்

நகுலா சிவநாதன் தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள் கார் கால மழைமேகம் கண்ணிமைக்கும் நேரத்திலும் போர் மேகம் சூழ்ந்தாலும் வாரியிறைக்கும்...

Continue reading

சக்தி சத்திதாசன்

காதல்
நெஞ்சுக்குள்ளே எரியும்
சுவாலை எந்த நீரினாலும்
அடங்காத தாகம்
எனக்குள்ளே … எனக்குள்ளே ….
பிறக்கின்ற வேகம் ;
ஏதோ சிறகெடுத்து
பறக்கின்ற ஞானம்…..

பிறந்ததன் பயனறியா
இறந்தபின் முடிவறியா
ஈரம் !ஈரம் !ஈரம் !
நெஞ்சை அழுத்தி நிற்கும்
பாரம் !
மோகச் சுழலுக்குள்
மீள வழியின்று
சிக்கித் தவித்து நின்ற
முட்டாள் பருவமதில்
அறியாதிருந்த அனுபவங்கள்
ஆயிரமாய்க் கற்றுத் தந்தன…

எதைத் தேடினேன் —-பின்னே
அதையா நாடினேன்?
ஏனோ மூடினேன் நெஞ்சக்
கதவைத் திறக்கச்
சாவி ! சாவி !சாவி !

இல்லையெனத் தாவிச்
சரிந்ததொரு
தென்னஞ்சோலையெனும்
காதல் சாலையதில்
நீளமான பயணத்தில்
நின்று விட்ட ஞாபகங்கள் …….

தொலைத்து விட்ட கணங்களை
எனக்குள் நானே
இன்றும் தேடிக் கொண்டே …..

சக்தி சக்திதாசன்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் அன்பில் உயர்ந்த பிறப்பிடம் ஆதரவில் பதிந்த சிறப்பிடம் இனிமை உதித்த தரிப்பிடம் ஈரேழு ஜென்மும் போற்றும் உலகத்தோரின்...

    Continue reading