10
Jul
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
10
Jul
நாடொப்பன செய்
நாடொப்பன செய்
செய்வன திருந்திடச் செய்யும் போதினிலே
நல்லென நாட்டிற்கு அமைந்த வேளையிலே
சில்லென...
10
Jul
மரணித்தவனே மறுபடி வந்தால்
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-07-2025
மரணத்தின் மௌனம் கலைந்து
மீண்டும் உயிர்த்தெழுவாயா?
மண்ணில் இட்ட விதை
மறுபடி...
சக்தி சத்திதாசன்
காதல்
நெஞ்சுக்குள்ளே எரியும்
சுவாலை எந்த நீரினாலும்
அடங்காத தாகம்
எனக்குள்ளே … எனக்குள்ளே ….
பிறக்கின்ற வேகம் ;
ஏதோ சிறகெடுத்து
பறக்கின்ற ஞானம்…..
பிறந்ததன் பயனறியா
இறந்தபின் முடிவறியா
ஈரம் !ஈரம் !ஈரம் !
நெஞ்சை அழுத்தி நிற்கும்
பாரம் !
மோகச் சுழலுக்குள்
மீள வழியின்று
சிக்கித் தவித்து நின்ற
முட்டாள் பருவமதில்
அறியாதிருந்த அனுபவங்கள்
ஆயிரமாய்க் கற்றுத் தந்தன…
எதைத் தேடினேன் —-பின்னே
அதையா நாடினேன்?
ஏனோ மூடினேன் நெஞ்சக்
கதவைத் திறக்கச்
சாவி ! சாவி !சாவி !
இல்லையெனத் தாவிச்
சரிந்ததொரு
தென்னஞ்சோலையெனும்
காதல் சாலையதில்
நீளமான பயணத்தில்
நின்று விட்ட ஞாபகங்கள் …….
தொலைத்து விட்ட கணங்களை
எனக்குள் நானே
இன்றும் தேடிக் கொண்டே …..
சக்தி சக்திதாசன்

Author: Nada Mohan
14
Jul
செல்வி நித்தியானந்தன்
இசை
இசையோடு எல்லாம்
இவ்வுலகுஇணைத்திடும்
பசைபோல ஒட்டியே
பாரினில் சிறந்திடும்
அகிலத்தில் எல்லாமே
இசையோடு சேர்ந்திடும்
அன்றாட ...
13
Jul
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம் _195
"கோடைகாலம்"
கோடையில் வரும்
வாடைகாற்று வசந்தத்தை வரவேற்கிது
வசலில் நிற்கும் வாழையடி...
10
Jul
ஜெயம்
இசைக்கு மயங்காதோர் இவ்வுலகில் இல்லை
இசையொன்றே தாண்டிவிடும் ஜாதிமத எல்லை
இறைவனுக்கு...