பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

சக்தி சிறினிசங்கர்

அனைவருக்கும் உற்சாக வணக்கம் !
வியாழன் கவிதை நேரம்
கவித் தலைப்பு
காற்றின் வழி மொழியாகி வாழ்வு தந்தாய்
*******************
எதிரொலிக்கக் கண்டான் மார்க்கோனி
புதிய படைப்பினில் புத்தியைத் தீட்டினான்
அதிசயமாக உருவானது அவனிக்கு ஆனந்தமே//

தனிமையைப் போக்கிடும் சாதனம்
இனிமையை நிறைத்திடும் ஊடகம்
விந்தைகள் நிறைந்த விஞ்ஞான வளர்ச்சியில்
எந்த மூலையிலும் எதிரொலிக்கும் வகை
பந்தலாய் விரிந்தது பாமுகமாயய்ப் பரந்தது//
அருமருந்து சொல்லும் ஆரோக்கியமும் தருமே
உருவாக்கச் சொல்லும் உயர்வடையச் செய்யும்
ஆன்மீகம் வளர்க்க அனுதினமும் ஆர்வலர்கள்
தேன்தமிழ் சுவைசொட்டச் தேடுதலை நாடுவரே
சிறியவர் முதல் பெரியவர் வரை
அறிவிலே உயரவும் ஆற்றலை வளர்த்திடவும்
ஊற்றாகி நிற்கும் உன்னத ஊடகம்
போற்றிட வேண்டுமே பொழுதெல்லாம் நன்மையே//
மழலைகள் ஆரவாரம் மனத்தினை நிறைத்திடும்
பழங்களின் சவையன்ன பைந்தமிழ் மணம்வீச
கவிதைகள் படைத்திடும் கவிஞர்கள் ஆகக்
குவிந்திடுமே ஆக்கங்கள் குவலயம் வியக்கவே
எழுத்திலே முதலாய் ஏற்றத்தில் உச்சமாக
விழுதுகள் விட்டே வியாபித்த வானொலியாய்
காற்றிலே அலையாகிக் கலந்தாயே என்றும்
தோற்பதே இல்லை தொன்மைத் தமிழ் வாழுமே!

நன்றி வணக்கம்!

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading