புத்தாண்டே வா -56

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 10-04-2025 புத்தாண்டே வா புதுமை பொலிவுடனே புலத்தில் நிம்மதியும் பூகோளத்தில் அமைதியும் சோகங்கள் விட்டு சொந்தங்கள் சேர்ந்து சொல்பேச்சு கேட்டு சொர்க்க...

Continue reading

இன்னமும் மாறவில்லை

நகுலா சிவநாதன் இன்னமும் மாறவில்லை காலநிலை இன்னமும் மாறவில்லை கடும் குளிரும் குறையவில்லை பாட்டு வெயிலும் பகலவன் ஒளியும் கூட்டுது...

Continue reading

சக்தி சிறினிசங்கர்

வியாழன் கவிதை
மாற்றத்தின் திறவுகோல்!
ஆண்டு தோறும் மாற்றம் வேண்டும்
அலட்டிக்கொளாகிறோம் அவாபடுகிறோம்
கூண்டுக்கிளி போல் அல்லாமல்
பூட்டுப்போட்ட நம் உள்ளத்தை
திறந்தே வெளிவருவோம்
ஆவன செய்தல் ஆளுமை வளர்த்தல்
எதுவும் இல்லா வாழ்வில்
எங்கே காண்போம் மாற்றம்?
எண்ணத்தில் உதித்து
உணர்வில் கலந்து
செயலாய் வடிவம் கொள்ளும்போது
மாற்றம் நிகழும்!
மாற்றத்தின் திறவுகோல் நாமே
மற்றவருக்காக மாறாமல்
நமக்காக மாறுவோம்!
எம்மை மாற்றுவோம்!
கற்றுக்கொள்ள நிறைய உண்டு
குற்றங்குறை காணாது
பற்றறுதலோடு வாழ்ந்து
சுற்றமும் இனிமையாய் வாழ்ந்திட
ஏற்றுங்கள் காண
மாற்றத்தின் திறவுகோல்களாக
மாறுவோம்!
நன்றி வணக்கம்!

கவிதைநேரத் தொகுப்பாளினிகளுக்கும்
வாணி மோகனுக்கும் மிக்க நன்றி!

Nada Mohan
Author: Nada Mohan

    வஜிதா முஹம்மட் சந்திர நாட்காட்டி சரித்திர வழிகாட்டி புனிதப்பட்ட மாதம் புரையோடிய பாவத்தின் மன்னிப்பு நோன்பின்நேரம் இறைகட்டளையை நினைவூட்டி மனித...

    Continue reading