சக்தி சிறினிசங்கர்

சந்தம் சிந்தும் சந்திப்பு
கவித்தலைப்பு
பரவசம்!
தாரம் ஆனது பரவசம்
தாய்மை அடைந்தது பரவசம்
தங்கமகனை அள்ளி அணைத்து
தாய்ப்பால் ஊட்டியதும்
ஆனந்தப் பரவசத்தில்
துள்ளியது என்மனம்!
தித்திக்கும் முத்தம் தந்து
அரும்பு மொழிபேசி
குறும்பு சேட்டை செய்து
கவலைகள் மறக்கவைத்தவன்
என் உலகம் என உருவானவன்
கனவுகளின் கருவானவன் கவிதைக்குப் பொருளானவன்
தாய்மையே பெண்மைக்கு பரவசம்!

நன்றி வணக்கம்!

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

    Continue reading