10
Jul
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
10
Jul
நாடொப்பன செய்
நாடொப்பன செய்
செய்வன திருந்திடச் செய்யும் போதினிலே
நல்லென நாட்டிற்கு அமைந்த வேளையிலே
சில்லென...
10
Jul
மரணித்தவனே மறுபடி வந்தால்
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-07-2025
மரணத்தின் மௌனம் கலைந்து
மீண்டும் உயிர்த்தெழுவாயா?
மண்ணில் இட்ட விதை
மறுபடி...
சாதனைப்பகிர்வும் சரித்திரச்சுவடும்
இரா விஜயகௌரி
சரித்திரச் சுவட்டினை
தினமும் பதித்தான்-இவன்
சமர்களை நாளும் வாழ்வாய்
வழியாய் பாதை தொடுத்தே எழுந்தவன்
போராட்டமும் போட்டியும் -இவன்
குரல்வளை நசுக்கிட- நாளும்
புதிதாம் படைப்பினை விதைப்பாய்
நம்பிக்கைத் தொடுப்பாய் தொடுத்தவன்
தமிழின் இழைதனில் இழைய
இளைய தலைமுறை வடத்தினை வலிந்து
வளைந்து இயைந்து இசைந்து
இயல்பாய் வளமாய் வாழ்வாய். கலந்தவன்
உயிர் மூச்சின் ஆளுமை உராய்ந்து செப்பி
முயன்றே எழுந்திடமுழுக்கரம் கொடுத்தவன்
அழகிய மலர்களின் அணைப்பின் தந்தை
இதயம் கலந்துஇயல்புற உயர்த்தினான்
பகட்டே இல்லா பாமுகத்தந்தை
பழகிச் செலுத்திடும் பவ்யமாம் குழந்தை
பாவலன் பாரதி செல்லம்மா போலொரு
வாணி மகள் இவனது வலக்கரம் கலந்தாள்
இராகவி மகளாள்இன்முகம் கலக்க
சாதனைப்பகிர்வு. சரித்திரம் தொட்டது
உயர்ந்தவர் பலரின் உன்னத மகிழ்வினில்
உயர்வுள்ளல்கொண்டன்ன் எங்கள் ஆளுமை

Author: Nada Mohan
14
Jul
செல்வி நித்தியானந்தன்
இசை
இசையோடு எல்லாம்
இவ்வுலகுஇணைத்திடும்
பசைபோல ஒட்டியே
பாரினில் சிறந்திடும்
அகிலத்தில் எல்லாமே
இசையோடு சேர்ந்திடும்
அன்றாட ...
13
Jul
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம் _195
"கோடைகாலம்"
கோடையில் வரும்
வாடைகாற்று வசந்தத்தை வரவேற்கிது
வசலில் நிற்கும் வாழையடி...
10
Jul
ஜெயம்
இசைக்கு மயங்காதோர் இவ்வுலகில் இல்லை
இசையொன்றே தாண்டிவிடும் ஜாதிமத எல்லை
இறைவனுக்கு...