தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

சித்திரை மகளே நீ வாழி!

சித்திரை மகளே நீ வாழி!

சித்திரை மகளே தினமலரே
சீர்பெற வந்தாய் நீ வாழி!
கத்திரி வெயிலாய் காய்கின்றபோது
விற்றமின் „டி“ யாய் மாறுகின்றாய்

வியர்வைத் துளியாய் வீழ்கின்றாய்
விரும்பியே மண்ணில் தாழ்கின்றாய்
கத்தரி வெண்டி காய்கனியாய்;
களனியில் முழைத்தாய் நீ வாழி

காற்றாய் கனலாய் வீசுகிறாய்
கடலிடை நடுவே நீந்துகிறாய்
நேற்றாய் நிறைந்தாய் நினைவாக
இன்றாய் தரிசனம் தருகின்றாய்.

நாளை பொழுதின் நகலாக
காலப் பயணம் செய்கின்றாய்
சித்திரை மகளே நீ வாழி
மாற்றத்தின் சந்தண மணம் வீசி!

கவிக்கோ பரம விஸ்வலிங்கம்

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

Continue reading