புத்தாண்டே வா -56

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 10-04-2025 புத்தாண்டே வா புதுமை பொலிவுடனே புலத்தில் நிம்மதியும் பூகோளத்தில் அமைதியும் சோகங்கள் விட்டு சொந்தங்கள் சேர்ந்து சொல்பேச்சு கேட்டு சொர்க்க...

Continue reading

இன்னமும் மாறவில்லை

நகுலா சிவநாதன் இன்னமும் மாறவில்லை காலநிலை இன்னமும் மாறவில்லை கடும் குளிரும் குறையவில்லை பாட்டு வெயிலும் பகலவன் ஒளியும் கூட்டுது...

Continue reading

சித்திரை மகளே நீ வாழி!

சித்திரை மகளே நீ வாழி!

சித்திரை மகளே தினமலரே
சீர்பெற வந்தாய் நீ வாழி!
கத்திரி வெயிலாய் காய்கின்றபோது
விற்றமின் „டி“ யாய் மாறுகின்றாய்

வியர்வைத் துளியாய் வீழ்கின்றாய்
விரும்பியே மண்ணில் தாழ்கின்றாய்
கத்தரி வெண்டி காய்கனியாய்;
களனியில் முழைத்தாய் நீ வாழி

காற்றாய் கனலாய் வீசுகிறாய்
கடலிடை நடுவே நீந்துகிறாய்
நேற்றாய் நிறைந்தாய் நினைவாக
இன்றாய் தரிசனம் தருகின்றாய்.

நாளை பொழுதின் நகலாக
காலப் பயணம் செய்கின்றாய்
சித்திரை மகளே நீ வாழி
மாற்றத்தின் சந்தண மணம் வீசி!

கவிக்கோ பரம விஸ்வலிங்கம்

Nada Mohan
Author: Nada Mohan

வஜிதா முஹம்மட் சந்திர நாட்காட்டி சரித்திர வழிகாட்டி புனிதப்பட்ட மாதம் புரையோடிய பாவத்தின் மன்னிப்பு நோன்பின்நேரம் இறைகட்டளையை நினைவூட்டி மனித...

Continue reading