சத்தமின்றி சாதனை செய்

இரா விஜயகௌரி வித்தகத்தை விரல் நுனிக்குள் வைத்தெடுத்தா படைத்தான் உரசி எழும் பொழுதெல்லாம் தடம் பதித்து சாதனை செய் குடும்பத்து...

Continue reading

சித்திரை மகளே நீ வாழி!

சித்திரை மகளே நீ வாழி!

சித்திரை மகளே தினமலரே
சீர்பெற வந்தாய் நீ வாழி!
கத்திரி வெயிலாய் காய்கின்றபோது
விற்றமின் „டி“ யாய் மாறுகின்றாய்

வியர்வைத் துளியாய் வீழ்கின்றாய்
விரும்பியே மண்ணில் தாழ்கின்றாய்
கத்தரி வெண்டி காய்கனியாய்;
களனியில் முழைத்தாய் நீ வாழி

காற்றாய் கனலாய் வீசுகிறாய்
கடலிடை நடுவே நீந்துகிறாய்
நேற்றாய் நிறைந்தாய் நினைவாக
இன்றாய் தரிசனம் தருகின்றாய்.

நாளை பொழுதின் நகலாக
காலப் பயணம் செய்கின்றாய்
சித்திரை மகளே நீ வாழி
மாற்றத்தின் சந்தண மணம் வீசி!

கவிக்கோ பரம விஸ்வலிங்கம்

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading