பதியமிடும் எழுத்தாணிகள்…

வசந்தா ஜெகதீசன் இருபத்தியொன்பது ஆண்டின் தொடர்ச்சி ஈடிணையற்ற படைப்புகளின் வளர்ச்சி இளையோர்கள் நோக்கிய புரட்சி எழுத்தாளர் மாதமாய்...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்

நகுலா சிவநாதன் பதியமிடும் எழுத்தாணிகள் எழுத்தாலே பதியமிட்டு எண்ணத்தால் கோலமிட்டு எழுகின்ற வாழ்க்கை எழில்மயமாய் அமைந்திடும் எழுத்தாளர்வாரம் எடுக்கின்ற பதியம் தொடுக்கின்ற மாலைகளால் தொடரட்டும் என்றும் விரிந்திட்ட...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்…..

ரஜனி அன்ரன் ((B.A) பதியமிடும் எழுத்தாணிகள் 04.06.2026 ஒற்றைவரியில் உலகத்தைத் திருப்பும் ஏற்றம்மிக்க ஆயுதம் எழுத்தாணி எழுத்தின்...

Continue reading

“சின்ன வயதில் “

சந்த கவி
இலக்கம்_197

“சின்ன வயதில்”

கைக் கட்டில்லை வாய்கட்டில்லை
கால்கட்டில்லை சிட்டுகுருவியாக
சிறகடித்து பறந்தேன்!

அம்மாவிடம் அடம் பிடிப்பது
ஐயாவை கண்டதும் அமைதியாவதும்
அக்காமார்களுடன் தோழியாய் கைகோத்து திரிந்தேன்
அண்ணன்மாரின் அரவணைப்பில் வளர்ந்தேன்!

தம்பிமார்களின் குறும்புகள்
வேப்பமர நிழலில் மணல் வீடு கட்டி விளையாடுவதும் அணிலை பொறி வைத்து பிடித்ததும்
அயல் நண்பிகளுடன் இணைந்து ஐயனார் கோயிலுக்கு
பொங்கலிட்டு படைத்தோமே!

ஒளித்து விளையாட
மாமரத்தில் ஏறி சறுக்கி விழுந்து அம்மாவிடம்
அடிவேண்டிய அழுததும்!

பென்சில் போனா வேண்ட
முட்டை கொடுத்து பண்டமாற்றாக கடையில் பொருட்கள் வாங்கியதும்!
சோட்ட தீன்பண்டங்கள் வேண்டி
பாடசாலையால் வரும்போது
மாணவிகளுடன் பகிர்ந்து
உண்டதும்!

இன்னு நினைவில்
நிழலாய் நித்தம் நீந்தும்!

சிவாஜினி
சிறிதரன்
11.08.25

Nada Mohan
Author: Nada Mohan