நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

“சின்ன வயதில் “

சந்த கவி
இலக்கம்_197

“சின்ன வயதில்”

கைக் கட்டில்லை வாய்கட்டில்லை
கால்கட்டில்லை சிட்டுகுருவியாக
சிறகடித்து பறந்தேன்!

அம்மாவிடம் அடம் பிடிப்பது
ஐயாவை கண்டதும் அமைதியாவதும்
அக்காமார்களுடன் தோழியாய் கைகோத்து திரிந்தேன்
அண்ணன்மாரின் அரவணைப்பில் வளர்ந்தேன்!

தம்பிமார்களின் குறும்புகள்
வேப்பமர நிழலில் மணல் வீடு கட்டி விளையாடுவதும் அணிலை பொறி வைத்து பிடித்ததும்
அயல் நண்பிகளுடன் இணைந்து ஐயனார் கோயிலுக்கு
பொங்கலிட்டு படைத்தோமே!

ஒளித்து விளையாட
மாமரத்தில் ஏறி சறுக்கி விழுந்து அம்மாவிடம்
அடிவேண்டிய அழுததும்!

பென்சில் போனா வேண்ட
முட்டை கொடுத்து பண்டமாற்றாக கடையில் பொருட்கள் வாங்கியதும்!
சோட்ட தீன்பண்டங்கள் வேண்டி
பாடசாலையால் வரும்போது
மாணவிகளுடன் பகிர்ந்து
உண்டதும்!

இன்னு நினைவில்
நிழலாய் நித்தம் நீந்தும்!

சிவாஜினி
சிறிதரன்
11.08.25

Nada Mohan
Author: Nada Mohan