புத்தாண்டே வா -56

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 10-04-2025 புத்தாண்டே வா புதுமை பொலிவுடனே புலத்தில் நிம்மதியும் பூகோளத்தில் அமைதியும் சோகங்கள் விட்டு சொந்தங்கள் சேர்ந்து சொல்பேச்சு கேட்டு சொர்க்க...

Continue reading

இன்னமும் மாறவில்லை

நகுலா சிவநாதன் இன்னமும் மாறவில்லை காலநிலை இன்னமும் மாறவில்லை கடும் குளிரும் குறையவில்லை பாட்டு வெயிலும் பகலவன் ஒளியும் கூட்டுது...

Continue reading

சிவதர்சனி இராகவன்

வியாழன் கவி 1934…

காற்றின் வழி மொழியாகி
வாழ்வு தந்தாய்…!

மூச்சுக் காற்றில்
உயிர்த்த குரற் பூவாகி
பல்லோரும் செவி ஏற்கப்
பக்குவமாய் ஆளாக்கினாய்
இனிதெனக் குரலிடை
இழையோடி நீ சேர்ந்தாய்
இணையத்தின் துணையோடு
எனை ஆளாக்கினாய்…!

மொழியென ஊற்றாக்கி
மொழிந்திடும் பேறாகினாய்
வழித்தடம் மாறாமல்
வழிகாட்டி எனைத்தாங்கி
உழிகொண்டு செதுக்கினாய்
உரிமையோடு சுவை கூட்டினாய்
காற்றலை செவி உட்புகுந்து
தோற்றலை மாற்றி வெற்றியே
என் வாழ்வாக்கினாய்…!
சிவதர்சனி இராகவன்
15/2/2024

Nada Mohan
Author: Nada Mohan

    வஜிதா முஹம்மட் சந்திர நாட்காட்டி சரித்திர வழிகாட்டி புனிதப்பட்ட மாதம் புரையோடிய பாவத்தின் மன்னிப்பு நோன்பின்நேரம் இறைகட்டளையை நினைவூட்டி மனித...

    Continue reading