புத்தாண்டே வா -56

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 10-04-2025 புத்தாண்டே வா புதுமை பொலிவுடனே புலத்தில் நிம்மதியும் பூகோளத்தில் அமைதியும் சோகங்கள் விட்டு சொந்தங்கள் சேர்ந்து சொல்பேச்சு கேட்டு சொர்க்க...

Continue reading

இன்னமும் மாறவில்லை

நகுலா சிவநாதன் இன்னமும் மாறவில்லை காலநிலை இன்னமும் மாறவில்லை கடும் குளிரும் குறையவில்லை பாட்டு வெயிலும் பகலவன் ஒளியும் கூட்டுது...

Continue reading

சிவதர்சனி இரா

வியாழன் கவிதை 1922!

நோக்கடா மானிடா…!

நோக்கம் கொண்ட மனிதா
நீ நோக்கிட எத்தனை விதமாய்
தேக்கிட எண்ணு தினமும்
ஆக்கிடும் அதனுள் பலதே..

வாக்கினைத் தருவாரும்
உளரே – வல்லவை
ஊக்கிட உதவுவாரும் சிலரே
ஏக்கமும் மெல்ல விலக்கு
ஏந்திட வேண்டுமே உழைப்பு..

பூத்திடும் நொடிகள் விரைவாய்
புனைந்திடு கனவினை உன்
நனவென யாவும் மாறும்
புவனமும் உன்னைப் போற்றும்..

உனக்கென இருப்பது உனது
அதைத் திருடிட யாரால்
இயலும்?- ஒரு நாள் உனக்கது
மெல்லவே புரியும் மானிடா…!
சிவதர்சனி இராகவன்
25/1/2024

Nada Mohan
Author: Nada Mohan

    வஜிதா முஹம்மட் சந்திர நாட்காட்டி சரித்திர வழிகாட்டி புனிதப்பட்ட மாதம் புரையோடிய பாவத்தின் மன்னிப்பு நோன்பின்நேரம் இறைகட்டளையை நினைவூட்டி மனித...

    Continue reading