” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

சிவதர்சனி இரா

வியாழன் கவிதை 1922!

நோக்கடா மானிடா…!

நோக்கம் கொண்ட மனிதா
நீ நோக்கிட எத்தனை விதமாய்
தேக்கிட எண்ணு தினமும்
ஆக்கிடும் அதனுள் பலதே..

வாக்கினைத் தருவாரும்
உளரே – வல்லவை
ஊக்கிட உதவுவாரும் சிலரே
ஏக்கமும் மெல்ல விலக்கு
ஏந்திட வேண்டுமே உழைப்பு..

பூத்திடும் நொடிகள் விரைவாய்
புனைந்திடு கனவினை உன்
நனவென யாவும் மாறும்
புவனமும் உன்னைப் போற்றும்..

உனக்கென இருப்பது உனது
அதைத் திருடிட யாரால்
இயலும்?- ஒரு நாள் உனக்கது
மெல்லவே புரியும் மானிடா…!
சிவதர்சனி இராகவன்
25/1/2024

Nada Mohan
Author: Nada Mohan