திசை மாறும் திருப்பங்கள்…….

இரா விஜயகௌரி பிறக்கும் போதே இறப்பெழுதி இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி உருண்டு ஓடும் தினங்களுள்ளே உளைச்சலில் உழலும்...

Continue reading

சிவதர்சனி இரா

வியாழன் கவிதை 1922!

நோக்கடா மானிடா…!

நோக்கம் கொண்ட மனிதா
நீ நோக்கிட எத்தனை விதமாய்
தேக்கிட எண்ணு தினமும்
ஆக்கிடும் அதனுள் பலதே..

வாக்கினைத் தருவாரும்
உளரே – வல்லவை
ஊக்கிட உதவுவாரும் சிலரே
ஏக்கமும் மெல்ல விலக்கு
ஏந்திட வேண்டுமே உழைப்பு..

பூத்திடும் நொடிகள் விரைவாய்
புனைந்திடு கனவினை உன்
நனவென யாவும் மாறும்
புவனமும் உன்னைப் போற்றும்..

உனக்கென இருப்பது உனது
அதைத் திருடிட யாரால்
இயலும்?- ஒரு நாள் உனக்கது
மெல்லவே புரியும் மானிடா…!
சிவதர்சனி இராகவன்
25/1/2024

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

    Continue reading