பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

சிவதர்சனி

வியாழன் கவி 1571!
மீண்டு வருக!!

வெண்திரை மேகம் வான்விட்டு வந்ததோ
வெண்துகிலாகித் தருக்களின்
மேனி மூட!!
கண்திரை வியந்து நோக்கக்
கனிந்த காட்சி
மண்ணுயிர் வாங்கி வந்த வரமெனத்
தோன்றுதோ!!

தைமகள் மெல்லத் தளர்ச்சி காண்கிறாள்
மனதைத் தைத்துமே விடையது
கூற முயல்கிறாள்
எத்தனை எண்ணங்கள் இங்கே
செயலாகக் காத்திருக்க
என்னிதயக் கூட்டில் கருவொன்று
கண்விழித்திருக்கும்!!

செல்லரித்த ஏடுகள் போக மீதம்
உள்ளன
காலத்துக்கேற்றவை தங்க மீதம்
வான்மீகத்துக்கிரையாக,
அன்று சிற்றம்பலத்தான் முன்றலில்
ஏடுகள் கைவந்தன
இன்று எத்தனை பாடுகள் பட்டே
நாம் சேர்த்த!!!

அத்தனை ஒளி நாடாப்பதிவுகள் யார்கண் பட்டதோ
சுட்டவை போக மீதமேனும் நம்
கைவருமா
பாமுகப் பெட்டகத்தில் தலைமுறை
காக்கப் பூத்தவை
புனிதமாய்க் காத்தவை நம் முன் மீளத்தோன்றுமா!!
சிவதர்சனி இராகவன்
26/1/2022

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading