19
Mar
வரமானதோ வயோதிபம்..!
சிவதர்சனி இராகவன்
வியாழன் கவி -2125
வரமானதோ வயோதிபம்..!!
வரமானதோ வயோதிபம் அன்றி
உரமானதோ வாழ்வில் அதிகம்
பயிரானதோ விளை...
தினக்கவி 1979..!
சிவந்த மே..!
உறவுகளின் உருக்கமான
குரல் ஒடுக்கப்பட்டது
உன்னத உயிர்கள் பலி
கொள்ளப் பட்டது
ஒன்றா இரண்டா ஆறிட
ஆயிரங்கள் பற்பலவாய்
ஓலங்கள் கேட்ட போதும்
உதவும் மனதோடு இல்லை
யாருமே அருகிலே
இன்றும் அந்த வடுக்களை
சுமந்தே வாழும் இதயங்கள்
காணாமல் போனோர்
நிலை தெரியாது தவிக்கும்
பெற்றோருக்கு எப்படித்தான்
ஆறுதல் சொல்லுவது
ஆண்ட இனம் அழிக்கப்பட
அல்லலுற்று உடல் சிதைக்கப்பட
போதும் இன்னும் வேண்டாமே
வேண்டும் குற்றத்துக்கு நீதியே..
சிவதர்சனி இராகவன்
16/5/2024
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.