சிவந்த மே

சிவதர்சனி

தினக்கவி 1979..!

சிவந்த மே..!

உறவுகளின் உருக்கமான
குரல் ஒடுக்கப்பட்டது
உன்னத உயிர்கள் பலி
கொள்ளப் பட்டது
ஒன்றா இரண்டா ஆறிட
ஆயிரங்கள் பற்பலவாய்
ஓலங்கள் கேட்ட போதும்
உதவும் மனதோடு இல்லை
யாருமே அருகிலே
இன்றும் அந்த வடுக்களை
சுமந்தே வாழும் இதயங்கள்
காணாமல் போனோர்
நிலை தெரியாது தவிக்கும்
பெற்றோருக்கு எப்படித்தான்
ஆறுதல் சொல்லுவது
ஆண்ட இனம் அழிக்கப்பட
அல்லலுற்று உடல் சிதைக்கப்பட
போதும் இன்னும் வேண்டாமே
வேண்டும் குற்றத்துக்கு நீதியே..
சிவதர்சனி இராகவன்
16/5/2024

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading