புத்தாண்டே வா -56

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 10-04-2025 புத்தாண்டே வா புதுமை பொலிவுடனே புலத்தில் நிம்மதியும் பூகோளத்தில் அமைதியும் சோகங்கள் விட்டு சொந்தங்கள் சேர்ந்து சொல்பேச்சு கேட்டு சொர்க்க...

Continue reading

இன்னமும் மாறவில்லை

நகுலா சிவநாதன் இன்னமும் மாறவில்லை காலநிலை இன்னமும் மாறவில்லை கடும் குளிரும் குறையவில்லை பாட்டு வெயிலும் பகலவன் ஒளியும் கூட்டுது...

Continue reading

சிவரஞ்சினி கலைச்செல்வன்

காணி
மாவை கந்தன் மகிமை பெற்ற ஊரில்
சீமெந்து தொழிற்சாலை
தெற்காக எம் காணி
உக்கிய உரம் இட்டு
உழுது பதப்படுத்தி
வெற்றிலை கொழுந்து நட்டு
விரைவாய் தளிர் விட்டு
பற்றி வளர என்று
முள் முருக தடி நட்டு
இராசவள்ளி முளை கிழங்கு
இடை இடையே தாட்டுவிட்டு
பச்சை செடி வளர்த்து
பணம் சேர்த்த காணி அது.
கடலாலே ஆமி வந்து
காப்பரனை அங்கமைத்து
விடுகின்ற ஷெல் அடியால்
விறகாகி போனதது
போர் ஓஞ்சு போச்சென்று
போய் பார்க்க காணிக்குள்
புத்தர் விகாரை ஒன்று
பூத்திருக்கு புதிதாக.
பிக்கு ஒருவருக்கு
பக்கத்தே ஆமி
பக்தரை காக்கும்
புத்தரை காக்கின்றார்
என் காணி எனக்காக
என் முருகன் அருள்வானோ?
சூரனை கொன்ற அவன்
மயிலேறி வருவானோ?
கொடியோரை கொல்ல.
-சிவரஞ்சினி கலைச்செல்வன்-

Nada Mohan
Author: Nada Mohan

    வஜிதா முஹம்மட் சந்திர நாட்காட்டி சரித்திர வழிகாட்டி புனிதப்பட்ட மாதம் புரையோடிய பாவத்தின் மன்னிப்பு நோன்பின்நேரம் இறைகட்டளையை நினைவூட்டி மனித...

    Continue reading