மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு……

இரா விஜயகௌரி இனிதாம் வாழ்வியல் பயணத்தொடரில் இடரெனச் சூழ்ந்திடும் நோயின் தொடுப்பு காற்றினில் மூச்சாய் கலந்திடும் கிருமி உள்துளைபுகுந்து...

Continue reading

சிவரஞ்சினி கலைச்செல்வன்

காணி
மாவை கந்தன் மகிமை பெற்ற ஊரில்
சீமெந்து தொழிற்சாலை
தெற்காக எம் காணி
உக்கிய உரம் இட்டு
உழுது பதப்படுத்தி
வெற்றிலை கொழுந்து நட்டு
விரைவாய் தளிர் விட்டு
பற்றி வளர என்று
முள் முருக தடி நட்டு
இராசவள்ளி முளை கிழங்கு
இடை இடையே தாட்டுவிட்டு
பச்சை செடி வளர்த்து
பணம் சேர்த்த காணி அது.
கடலாலே ஆமி வந்து
காப்பரனை அங்கமைத்து
விடுகின்ற ஷெல் அடியால்
விறகாகி போனதது
போர் ஓஞ்சு போச்சென்று
போய் பார்க்க காணிக்குள்
புத்தர் விகாரை ஒன்று
பூத்திருக்கு புதிதாக.
பிக்கு ஒருவருக்கு
பக்கத்தே ஆமி
பக்தரை காக்கும்
புத்தரை காக்கின்றார்
என் காணி எனக்காக
என் முருகன் அருள்வானோ?
சூரனை கொன்ற அவன்
மயிலேறி வருவானோ?
கொடியோரை கொல்ல.
-சிவரஞ்சினி கலைச்செல்வன்-

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading