நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

மாறியதே வாழ்க்கை…

வியாழன் கவி-2369

மாறியதே வாழ்க்கை..!!

கல்வி கற்கும் இளமை
காரியம் ஆற்றும் தகைமை
திருமண பந்த இணைவு
நாடு தாண்டிய இருப்பு
மாறியதே நம் வாழ்க்கை..

வேற்று மொழி சேர்க்கை
வேறுபட்ட மனித முகங்கள்
மாறி வந்த இருப்பிடம்
மாற்றந்தந்து போனது
அதுவே பழகியும் விட்டது..

பாமுகத்து அழைப்பது
பற்பல உயர்வு தந்தது
புலம் பெயர் தேசத்தில்
பலமதை கை சேர்த்தது
காலம் மாற்றியது வாழ்வை..
சிவதர்சனி இரா
16/7/2026

Nada Mohan
Author: Nada Mohan