“மாறியதே வாழ்க்கை”

நேவிஸ் பிலிப் கவி இல(634)

சின்னஞ் சிறு வயதினிலே
சிட்டாய் சிறகடித்து
துள்ளியோடி விளயாடி
பள்ளிசென்ற இன்ப நாட்கள்
மறக்கத்தான் முடியுமா?

கடந்து செல்லும் நாட்கள்
நகர மறுக்கும் நினைவுகள்
நிகழ் காலத்தை இரசிக்க
தடை போடும் எதிர் காலம்

தொலைந்து போன காலங்களில்
கடந்த காலம் கல்வெட்டாக
வரும்காலம் மனதிலே பயமாகி
நிகழ்கால நிசங்களிலே
திளைக்க மனம் மறுக்கிறது

இளமை தொலைந்து
முதுமையில் நுழைந்து
பிறரில் தங்கி வாழ்ந்திடுவேனோ?
என்றொரு அச்சம் என்னை சூழ

என்னாலும் முடியும் என்ற
ஒளிக் கீற்றாயோர் நம்பிக்கை
என்னைச் சுற்றிப்படர
நானும் வாழ்ந்திடுவேன்
நம்பிக்கையில் தடம்பதித்து
நன்றி,,,,,,,,

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

Continue reading

சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

Continue reading