இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ இயற்கை தரும் பயனில் எமதுவளம் அயராத கொடைகளை அழிக்கும் மனிதர்கள் மரத்தை...

Continue reading

“மாறியதே வாழ்க்கை”

நேவிஸ் பிலிப் கவி இல(634)

சின்னஞ் சிறு வயதினிலே
சிட்டாய் சிறகடித்து
துள்ளியோடி விளயாடி
பள்ளிசென்ற இன்ப நாட்கள்
மறக்கத்தான் முடியுமா?

கடந்து செல்லும் நாட்கள்
நகர மறுக்கும் நினைவுகள்
நிகழ் காலத்தை இரசிக்க
தடை போடும் எதிர் காலம்

தொலைந்து போன காலங்களில்
கடந்த காலம் கல்வெட்டாக
வரும்காலம் மனதிலே பயமாகி
நிகழ்கால நிசங்களிலே
திளைக்க மனம் மறுக்கிறது

இளமை தொலைந்து
முதுமையில் நுழைந்து
பிறரில் தங்கி வாழ்ந்திடுவேனோ?
என்றொரு அச்சம் என்னை சூழ

என்னாலும் முடியும் என்ற
ஒளிக் கீற்றாயோர் நம்பிக்கை
என்னைச் சுற்றிப்படர
நானும் வாழ்ந்திடுவேன்
நம்பிக்கையில் தடம்பதித்து
நன்றி,,,,,,,,

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading