பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

சிவரஞ்சினி கலைச்செல்வன்

சந்தம் சிந்தும் சந்திப்பு 239 “ஆறு மனமே”
எப்படி மனம் ஆறும்
ஏராளம் கவலை மனதோடு
அறுபத்தி ஆறு அகவைக்குள்
அடங்கா கவலை மனதுக்குள்
ஆறு ஏழு தலைமுறையாய்
ஆச்சி வம்ச சீதனமாய்
ஆறு அறை வீடு
நாற்சார் வீடு நடு முற்றம்
போச்சு எல்லாமே
போராலே குண்டடியால்
கட்டிலோடு ஆச்சியை
கடசி மகளோடு விட்டு
இயக்கம் பிடித்து இருந்த இல்லம் .
போர் முடிந்து போக முன்னர்
பொலீசு நடேசு குந்தி
உறுதி தன்பேரில்
உள்ளதெண்டு வாதாட்டம்
இரு பார் எடு வருமானம் என்டு
இலண்டன் மகள் சொல்லி
பழுதுகளை சரி பாக்க பணம் அனுப்ப
காணி வீடு தன்ரை எண்டு
கணக்கு விடுகின்றான்
அதிகாரி ஆதரவு அவன் பக்கம்
தொலைஞ்ச உறுதியை எடுக்க அலைஞ்சு திரியிறன் கந்தோர் கந்தோராய்.
கனடாவால் வரப்போக
கனக்க செலவாகும்.
அக்கம் பக்கம் எல்லாம்
ஆராரோ புதுச்சனங்கள் .
எப்படி வாழ்ந்தம்
நாடு மீட்பமெண்டு
நம் பொடியள் செத்துதுகள்
வீடும் போய் நாடும் போய்
காடு போற வயது
கரைச்சல் தலைவிதியோ?
-சிவரஞ்சினி கலைச்செல்வன்-

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading