கனவுப் பயணம்

சக்தி சிறினிசங்கர் விழி மூடித் தூங்குகையில்பயணிக்கின்றேன் தொலைதூரம் வழிநெடுக வயல்வெளிகள் வயல்வெளி யாவும் பச்சைப் பசேலென விரிந்து கண்களைக்...

Continue reading

கனவுப்பயணம்……

ரஜனி அன்ரன் (B.A) ....கனவுப்பயணம்..... 07.05.2026 கற்பனைச் சிறகைவிரித்து கனவுகளில் மிதந்து எழுத்துக்களின் தோப்பில் தொலைந்து எண்ணங்களின்...

Continue reading

சிவா சிவதரஷன்

வாரம் 191

“மழை நீர்”

மழைநீரே! மழை நீரே! விண்ணைத்தாண்டி வருவாயா?
விண்ணில் நீ உள்ளவரை பரிசுத்த தூய்மை காத்தாய்
என்று மண்ணில் விழுந்தாயோ அன்றே மாசடைந்து போனாய்
மண்ணில் உலவும் மாந்தரது குணங்கண்டு மாற்றமடைந்தாயோ?
கற்புடை மகளென உமைக்கருதியமை எங்கள் தவறோ?
நீயின்றி அமையாது உலகு என்பது மூதுரை
அறியாமை காரணமாய் இயற்கையைச் சீண்டுவோரின் பேதமை
பருவமுறைபேணி உயிர்களுக்கெல்லாம் உணவளித்தமை உன் தாய்மையின் பெருமை
பாரில் உன்பார்வை படாத நிலங்களைப்பார்,வரண்டு பாலைவனங்களாகின்றன
அங்கே உன் சீற்றத்தைக்காட்டு,பாலையும் சோலையாகும்
விளைந்து வீடு வரவிருந்த வேளாமை வெள்ளம் கொண்டுசெல்லல் முறையோ?
மனித குலம் தன்தவறை ஒருபோதும் உணராது, தாயவள் நீ மன்னித்து இந்த மக்களை வாழவை!
இயற்கையோடொட்டி இயல்பாய் மனிதன் வாழ்ந்திருந்தால் உலகும் குறையின்றி வாழும்,உன் சீற்றமும் தணிந்திருக்கும்.

நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading