பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

சிவா சிவதர்சன்

[ வாரம் 242 ]

“நீரிழிவு”

நோயற்றவாழ்வே குறைவற்றசெல்வம்
நள்ளிரவில் தாக்கும் பகையை ஒக்கும்
அறிகுறி காட்டாது மறைந்து தாக்கும் சலரோகம் நீரிழிவு,சக்கரைவியாதி, சலரோகம்,மதுமோகம்
எதுஎப்படி அழைப்பினும் கவனமின்றேல் காவுகொள்ளும்
நீரிழிவின் தாக்கங்கண்ட சர்வதேசத்தின் சலரோக விழிப்புணர்வு நாளாம் கார்த்கை 14.

உடல் தொழிற்பட உணவு தரும் மாச்சத்து சக்திதரும்
செரிமானமாகா மாச்சத்து உடலில்தேங்கி நீரழிவுக்கு வழிசமைக்கும்
நம்பிரதான உணவோ மாச்சத்து,சோறும் கிழங்குவகையுமாகும்
உடல் வருந்தித்தொழில் புரிய மாச்சத்தால் வரும் ஆபத்து தவிர்க்கப்படும்

நோயின் அறிகுறிகள் உடற்சோர்வு, அடிக்கடி சிறுநீர்போக்கு,பார்வைமங்குதல்,எடைக்குறைவு,தாகம்,நாவரட்சி என்பனவாகும்
அறிகுறிகளை அலட்சியம் செய்யின் மாரடைப்பு,சிறுநீரகசேதம்,நரம்புத்தளர்ச்சி போன்ற விளைவுகள் ஏற்படலாம்
நிறையுணவுப்பழக்கம் உணவில் பாகற்காய், கீரைவகை,நெல்லி,கறுவா,வெந்தயம்,மாந்தளிர் ஆகியவற்றைச்சேர்த்தல்,அசைவமாயின் மெலிதான இறைச்சி,மீன், முட்டைவெள்ளைக்கரு, பால் என்பவற்றோடு தானியங்கள்,பருப்பு, விதைவகைகள் உணவில் பிரதானமாம்.
நடைப்பயிற்சி,உடற்பயிற்சி,யோகா-தியானப்பயிற்சி போன்றவற்றில் ஈடுபட்டு சோம்பல் தவிர்த்து சுறுசுறுப்பாய் உடலை இயக்கினால் சலரோகம் முழுக்கட்டுப்பாட்டில் வந்துசேரும்
வைத்திய உதவியையும் தொடர்ந்து நாடவேண்டும்.

“நீரிழிவை கண்டறிவோம்,போராடுவோம் ஆனந்தமான வாழ்வுக்கு வழிசமைப்போம்”

நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading