வரமாகும் வாய்ப்புகளே

ராணி சம்பந்தர் வரமாகும் வாய்ப்புகளே விழித்திட உரமாகும் ஆய்வுகள் துளிர்த்திடும் சோரமாகும் வேண்டா வெறுப்பிலே பாரமாகும் தேய்வுகள் அழித்திடும் தரமாகும்...

Continue reading

வரமாகும் வாய்ப்புகளே..

வியாழன் கவி 2296 வரமாகும் வாய்ப்புகளே!!! வரமாகும் வரவுமாகும் சிரமேல் தாங்கினால் சிறப்புமாகும் சீராகும் காற்று வீசும் திசை போல் கடினம்...

Continue reading

சிவா சிவதர்சன்

[ வாரம் 262 ]
“நேரம்”

நேரம் பொன்னானது என்றே நெஞ்சினில் கொள்வாய் தோழா!
கறந்தபால் மடியில்ஏறுமா? இறந்தகாலம்நிகழ்காலமாகுமா தோழா?
காலமறிந்து முயற்சித்தால் வெற்றிநிச்சயம் தோழா!
இன்று செய்யவதை இன்றே,அதையும் நன்றே செய்வாய் தோழா!

நேரத்தை பின்போட்டு நாளை யென்றால் சோம்பல் உன்னை வென்றுவிடும்
நல்லநாள் தேடி இன்றையநாளைப்பழிபோடாதே
நாளும் கோளும் நன்மையே தருமென அறிவாய்
பிறர்க்குதவ என்றும் சித்தமாக நேரத்தை ஒதுக்குவாய்

தக்கநேரஉதவி,ஞாலத்தில் மாணப்பெரிதாம்
உடன்கிடைக்காத நீதியும் மறுக்கப்பட்ட நீதியாம்
நேரத்தை வீண்விரயஞ் செய்யாத மேதைகளை உலகறிவார்
மனிதராய் இறைவன் எமைப்படைத்த நேரம்

மனிதருள்ளும் மனம் ஒன்றை உருவாக்கிய நேரம்
பிறக்கும்நேரம் எல்லோரும் நல்லவராய் பிறந்தார்
வளரும்போது தீயவராய் மாறுவது சூழல் வாய்த்த நேரம்
அவமாய் நேரவிரயமும்சுயமாய்நேரந்தவறாமையும் உலகால் போற்றப்படும்.

நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் வரலாறு பலபாகம் வழிகூறும் பலகாலம் தமிழ்ப்பள்ளி உருவாக்கம் தரணிக்கே தனிமகுடம் உறவுகள் ஓன்றாகும் உயிர்ப்பு மொழி தமிழாகும் அடுத்த தலைமுறையும்...

    Continue reading

    ராணி சம்பந்தர் இதயத்தில் ஏற்பட்ட வலி தீர உதயமாகிய தமிழ் பள்ளிகள் ஆதாயமின்றி விழி திறந்தது இடம்பெயர்ந்தே முடமாகிய வாழ்வு...

    Continue reading