தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

சி.பேரின்பநாதன்

சந்தம் சிந்தும் கவிதை- 178

பாமுகம்

வானொலியாய் வான்பரப்பில் வலம் வந்து
பாமுகமாய் மலர்ந்து ஓளி வீசுகின்றது
பலமுகங்கள் அறிமுகத்தால் ஆற்றல் பெறுகின்றது
பன்முகத் திறமைகள் வெளிவருகின்றது

கடந்து வந்த பாதையோ மிகக் கடினமானது
வார்த்தைக்குள் அடங்காத வலிகள் நிறைந்தது
வைராக்கியமே இன்று வரை வழிநடத்துகின்றது
உற்ற துணையும் உறுதுணையாக நிற்கின்றது

ஆண்டுகள் இருபத்தைந்து நிறைவானது
தனித்துவத்தால் தலைநிமிர்ந்து நிற்கின்றது
எதிர்காலச் சந்ததிக்கு நல்வழி காட்டுகின்றது
இலட்சியப் பயணம் நன்றே தொடர்கின்றது

கவிதை ஆக்கம்
அல்வாய் பேரின்பநாதன்
லண்டன்
12-06-2022

Nada Mohan
Author: Nada Mohan

    சந்த கவி இலக்கம் _196 சிவாஜினி சிறிதரன் "களவு" பசி பட்டினி பஞ்சத்தால் களவு பாத்திருந்து திருடுபவர் வழித்தெருவில் கொள்ளையடிப்பு! உழைக்க பிழைக்க...

    Continue reading