நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

களவு

ராணி சம்பந்தர்

காலங்காலமாய்க் களவு கூடுகிறது
கோலங்கள் மாறி உளவு தொடுகிறது
பாலங்கள் கீறிப் பலகிப்‌ பெருகிறது

நாலு பக்கமும் ஞாலங் காட்டுகிறது
நூலற்ற மெழுகுதிரியாயக் கண்கள்‌
மின்னி கால் பின்னிட கன்னமிடுகிறது

சொந்தமற்ற பொருளை ஏமாற்றிப்
பலாத்காரம் பிடுங்கியே எடுக்கிறது பறிக்கும் கொள்ளை ஆட் கடத்தல் ,
கொலை,வெட்டுக் குத்துச் தொடர

அள்ளியதில் குடியும் குதூகலமும்
கூத்தும் போதையும் கூடியாடுகிறது
சூளும் சூதுகள் வீழும் வரையிலும்

பாழும் அவர் மனம் மாறித் தேறாத
வரையிலும் ருசி கண்ட பூனைகளில்
களவு மாறாத அலங்கோல அவலமே.

Nada Mohan
Author: Nada Mohan