திசை மாறும் திருப்பங்கள்…….

இரா விஜயகௌரி பிறக்கும் போதே இறப்பெழுதி இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி உருண்டு ஓடும் தினங்களுள்ளே உளைச்சலில் உழலும்...

Continue reading

களவு

ராணி சம்பந்தர்

காலங்காலமாய்க் களவு கூடுகிறது
கோலங்கள் மாறி உளவு தொடுகிறது
பாலங்கள் கீறிப் பலகிப்‌ பெருகிறது

நாலு பக்கமும் ஞாலங் காட்டுகிறது
நூலற்ற மெழுகுதிரியாயக் கண்கள்‌
மின்னி கால் பின்னிட கன்னமிடுகிறது

சொந்தமற்ற பொருளை ஏமாற்றிப்
பலாத்காரம் பிடுங்கியே எடுக்கிறது பறிக்கும் கொள்ளை ஆட் கடத்தல் ,
கொலை,வெட்டுக் குத்துச் தொடர

அள்ளியதில் குடியும் குதூகலமும்
கூத்தும் போதையும் கூடியாடுகிறது
சூளும் சூதுகள் வீழும் வரையிலும்

பாழும் அவர் மனம் மாறித் தேறாத
வரையிலும் ருசி கண்ட பூனைகளில்
களவு மாறாத அலங்கோல அவலமே.

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading