செல்வி நித்தியானந்தன்

உயிர்க்கொடை

வீட்டிற்க்கு வந்த
பிரதீபனாய்
விரும்பியே ஏத்த
விமலனாய்
வீரமாய் அவனது
செயலாய்
விதியும் பிரித்ததே
முடிவாய்

வானூர்தி போட்டதே
குண்டாய்
வானமும் வடித்த
மழையாய்
வாரியே கிடைத்த
பிணமாய்
வந்ததே செய்தியும்
இறப்பாய்

உயிரும் வேங்கையின்
காவியமாய்
உறவுகள் போற்றிடும்
மாதமாய்
உன்னத உயிர்கொடை
நாளுமாய்
உதிரத்து உறவுகளை
வணங்கிடுவோம்

செல்வி. நித்தியானந்தன்
(எனது அண்ணாவின்
மகன் கிளாலியில் இறப்பு)

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றம் கண்டிட பலரது இணைப்பு மாறுமோ வேண்டிட சிலரது பிணைப்பு காட்டிடும் ஆர்வமும் கவிதையின் முனைப்பு கண்ணியம் காட்டியே காவிடும்...

    Continue reading