கொழுத்தும் வெம்மை

வியாழன் கவி -2357 “கொழுத்தும் வெம்மை” ஐரோப்பா எங்கிலும் அதீத வெப்பத்தின் மிரட்சி அந்தோ பரிதாபம் புழுவாய்த் துடிக்கும் மனிதம் அப்பப்போ...

Continue reading

செல்வி நித்தியானந்தன்

உயிர்க்கொடை

வீட்டிற்க்கு வந்த
பிரதீபனாய்
விரும்பியே ஏத்த
விமலனாய்
வீரமாய் அவனது
செயலாய்
விதியும் பிரித்ததே
முடிவாய்

வானூர்தி போட்டதே
குண்டாய்
வானமும் வடித்த
மழையாய்
வாரியே கிடைத்த
பிணமாய்
வந்ததே செய்தியும்
இறப்பாய்

உயிரும் வேங்கையின்
காவியமாய்
உறவுகள் போற்றிடும்
மாதமாய்
உன்னத உயிர்கொடை
நாளுமாய்
உதிரத்து உறவுகளை
வணங்கிடுவோம்

செல்வி. நித்தியானந்தன்
(எனது அண்ணாவின்
மகன் கிளாலியில் இறப்பு)

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

    Continue reading