பாசத்தின் பகிர்வினிலே

பாசத்தின் பகிர்வினிலே பாசத்தின் பரிவினிலே பனியாய் உறைந்தேன நேசத்தின் ஊற்றினிலே நெகிழ்ந்து நின்றேனே வாசமுல்லை விரிந்தது...

Continue reading

பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

செல்வி நித்தியானந்தன்

உயிர்க்கொடை

வீட்டிற்க்கு வந்த
பிரதீபனாய்
விரும்பியே ஏத்த
விமலனாய்
வீரமாய் அவனது
செயலாய்
விதியும் பிரித்ததே
முடிவாய்

வானூர்தி போட்டதே
குண்டாய்
வானமும் வடித்த
மழையாய்
வாரியே கிடைத்த
பிணமாய்
வந்ததே செய்தியும்
இறப்பாய்

உயிரும் வேங்கையின்
காவியமாய்
உறவுகள் போற்றிடும்
மாதமாய்
உன்னத உயிர்கொடை
நாளுமாய்
உதிரத்து உறவுகளை
வணங்கிடுவோம்

செல்வி. நித்தியானந்தன்
(எனது அண்ணாவின்
மகன் கிளாலியில் இறப்பு)

Nada Mohan
Author: Nada Mohan