தினம்தினமாய்….

வசந்தா ஜெகதீசன் தினம்தினமாய்---- உழைப்பின் வேரே செழிப்புறும் உருளும் நாளின் காத்திடம் அகிலப்பரிதி விழிப்புறும் ஒற்றுமைச் செதுக்கல் ஒங்கிடும் வற்றாச்சுரங்க வரம்பிலே வலிந்து...

Continue reading

ஜெபா ஸ்ரீதெய்வீகன்

🙏அனைவருக்கும் வணக்கம்🙏
வியாழன் கவிதை

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-11

18-05-2023

உயிர் நேயம்

உலகத்தில் வாழும் உயிரிடத்தில்
நேயம் நாமும் கொண்டிடுவோம்.
மனித உயிர்கள் மட்டுமன்றி
பறவைகள், விலங்குகள் காத்திடுவோம்.

இயற்கையைப் பேணி உயிராக
இன்னலின்றி வளர்த்திடுவோம்.
பிளாஸ்டிக் மற்றும் கழிவுகளை
பாகம் பிரித்துப் போட்டிடுவோம்

கொடிய தீய தேற்றத்தால்
இயற்கை சீற்றம் கொண்டதுவே
தேவையற்ற உயிர்சேதம்
அப்பாவி மக்கள் கண்டதுவே

நாளும் உணவைக் கொட்டாமல்
யாருக்கேனும் பகிர்ந்தளிப்போமே
மா பெரும் மரங்கள் நாட்டி விட்டால்
பல பேரன் பேர்த்தி பலன் பெறுமே

கொலைவெறி அற்று இவ்வுலகில்
நிலை பெறுவோம் ஆனால்
மீட்டெடுப்போம் இவ்வுலகை
உயிர் நேயத்தோடு என்றும் நாமே.

நன்றி வணக்கம்.
ஜெபா ஸ்ரீதெய்வீகன்

Nada Mohan
Author: Nada Mohan