” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

ஜெபா ஸ்ரீதெய்வீகன்

🙏அனைவருக்கும் வணக்கம்🙏
வியாழன் கவிதை

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-11

18-05-2023

உயிர் நேயம்

உலகத்தில் வாழும் உயிரிடத்தில்
நேயம் நாமும் கொண்டிடுவோம்.
மனித உயிர்கள் மட்டுமன்றி
பறவைகள், விலங்குகள் காத்திடுவோம்.

இயற்கையைப் பேணி உயிராக
இன்னலின்றி வளர்த்திடுவோம்.
பிளாஸ்டிக் மற்றும் கழிவுகளை
பாகம் பிரித்துப் போட்டிடுவோம்

கொடிய தீய தேற்றத்தால்
இயற்கை சீற்றம் கொண்டதுவே
தேவையற்ற உயிர்சேதம்
அப்பாவி மக்கள் கண்டதுவே

நாளும் உணவைக் கொட்டாமல்
யாருக்கேனும் பகிர்ந்தளிப்போமே
மா பெரும் மரங்கள் நாட்டி விட்டால்
பல பேரன் பேர்த்தி பலன் பெறுமே

கொலைவெறி அற்று இவ்வுலகில்
நிலை பெறுவோம் ஆனால்
மீட்டெடுப்போம் இவ்வுலகை
உயிர் நேயத்தோடு என்றும் நாமே.

நன்றி வணக்கம்.
ஜெபா ஸ்ரீதெய்வீகன்

Nada Mohan
Author: Nada Mohan