பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

ஜெயம் தங்கராஜா

கவி 656
எழுத்தின் வித்தே பூத்தெழும் தமிழே

சிந்திக்கச் சிந்திக்க முத்துமுத்தாக கொட்டிவிடும்
சந்திக்கும் போதெல்லாம் அமுதமுது ஊட்டிவிடும்
மந்திரமாய் உச்சரிக்க புகழும் எட்டிவிடும்
தந்தே பேரறிவை விலாசம் இட்டுவிடும்

எழுத எழுத ஊற்றாகும் எண்ணங்கள்
பழுதுபடாது கொண்ட சிந்தையின் வண்ணங்கள்
உழுதுகொண்டு மனதை பண்படுத்த ஏராகும்
வழுக்கிவிழா கலாசாரத்தைத் தாங்கும் வேராகும்

நிலத்திலே பார்த்தது புலத்திலும் பூத்தது
அலங்காரம் கூட்டியே அழகையும் சேர்த்தது
இலக்கணம் ஆக்கத்தின் மூச்சென ஆக
இலக்கியம் உருவென சேர்ந்துமே போக

தாளும் பேனாவும் எடுக்காது விடுப்புக்கள்
நாளும் நாளும் ஓயாதே படைப்புகள்
நீளும் பயணத்தில் நீக்கியே தடைகள்
வாழும் வாழ்க்கைக்கும் கிடைத்தன விடைகள்

ஜெயம்
06-0602023

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading