மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

ஜெயம் தங்கராஜா

கவி 659

வாழ்க்கையே எனை கைவிட்டுவிடாதே

இந்த ஒருமுறை வாழ்க்கையும் போதும்
சிந்தை சலிக்காது மகிழ்ச்சியை ஓதும்

வாழ்நாள் இன்னமும் வேண்டும் நிறவாக
ஏழ்மைக்குள்ளும் சுகங்கள் இருக்குமே மறைவாக

தினமும் படித்திடும் புதிய பாடங்கள்
கணக்கிலே இல்லை போடுகின்ற வேடங்கள்

வேலை  வாழ்க்கைக்கு அர்த்தத்தைக் கொடுக்கின்றது
நாளை நிறைவாக்கி வெறுமையினை தடுக்கின்றது

நீளம் எவ்வளவு சரியாகத் தெரியவில்லை
காலம் மறைப்பினும் உவகையே எல்லை

கடினமாக வரும்போதெல்லாம் வலிமை பிறந்தது
அடித்தபின் அரவணைக்கும் வாழ்ககை சிறந்தது

உன்னதமான வாய்ப்பு பூலோகத்தில் ஒருதரம்
என்னதான் நிகழினும் அது பெருவரம்

தள்ளிவிட்டே  சிலவேளை வேடிக்கை பார்த்தது
சொல்லி தவறினை அனுபவம் சேர்த்தது

நேற்றை பற்றி இல்லையொரு மயக்கம்
காற்றை வணங்குகின்றேன் தொடர்கின்றது இயக்கம்

முயற்ச்சி பட்டுப்போகாது  முளைக்கும் எந்நாளும்
செயலை வேகமாக்கி நம்பிக்கையதும் நீளும்

கனவுகள் பலிக்கலாம் பலிக்காதும் விடலாம்
மனதின் ஆசைகள் வற்றாத கடலாம்

கடமை என்பதை உயிரெனக் கொண்டேன்
உடமை உறவென உள்ளூரக் கண்டேன்

புதிராக சிலநேரம் புரியாமல் இருக்கும்
எதிர்கால விருட்சத்தின் வேர்களைப் பெருக்கும்

ஆரோக்கியம் ஒன்றையே இதுவரை வேண்டுகின்றேன்
பாரோடு நட்போடு தீயவைகளைத் தாண்டுகின்றேன்

நல்லதெது கெட்டதெதுவென பட்டே கற்றுக்கொண்டேன்
உள்ளத்து துன்பங்கள் விலகுவதையும் கண்டேன்

விதிப்படி வந்திங்கு வாழ்ந்ததில் சந்தோசம்
மதிமீறும் தோல்விகளும் வெற்றிதனை பேசும்

நன்றிதனைக் கூறிவிட தேடுகின்றேன் ஆண்டவரை
என்றுமிந்த கூரையை தாங்கிநிற்கும் நடுச்சுவரை

ஜெயம்
25-06-2023

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading