நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

நட்பென்றாலே!

நகுலா சிவநாதன் நட்பென்றாலே!1 நட்பே உறவின் முதல்நாடி நாடுவதும் அதுவே நிறைநாடி உப்பாய் நட்பு உயர்ந்திட்டால் உலகில் ஒற்றுமை நிலைத்திருக்கும் நட்பின்...

Continue reading

ஜெயம் தங்கராஜா

எதிர்ப்பு அலை

அதிகாரத்திற்கு எதிரான எதிர்ப்பு அலையது

சதிகாரக் கும்பலின் முடிவு நிலையிது

சூழ்ச்சியால் வந்த ஒர் ஆட்சி

வீழ்ச்சியைக் காணும் ஓர் காட்சி 

குள்ளநரிகள் குதித்தே கும்மாளம் போட்டன

வெள்ளை மனங்கொண்டதாய் தங்களைக் காட்டின

சர்வவல்லமை பொருந்தியவரென பெயரும் சூட்டின

சர்வாதிகாரத்தாலே தம் ஆட்சியை ஓட்டின

நாளடைவில் தானே மக்களுக்கும் புரிந்தது

பாழடைந்த வாழ்க்கை யாராலென்று தெரிந்தது 

கலைக்கவே நரிகளை களைத்தவர் போராட்டம் 

நிலைக்கவோ நரிகளும் அரசியல் சூதாட்டம் 

ஊளையிட்டு மக்களை ஏமாற்றியது அந்தக்காலம் 

கோளைகளில்லை மக்களென்றுமென எடுத்தார் புதியகோலம்

வாழ்வதற்கு வழியில்லாமல்ச்செய்த அரசை துரத்தவே

ஆள்வதற்கு அருகதையான தலைவர்களை இருத்தவே

ஜெயம் 

14-04-2022

Nada Mohan
Author: Nada Mohan